'ஸ்பிரிட்' படத்தை விட்டு வெளியேறிய தீபிகா படுகோனே! | அப்துல் கலாம் வாழ்க்கை வரலாற்றில் தனுஷ் | இலங்கையில் படமாகும் 'மதராஸி' பட கிளைமாக்ஸ்! | கமல் 237வது படத்தின் படப்பிடிப்பு எப்போது? புது தகவல் | சிவகார்த்திகேயன் கேட்டால் நகைச்சுவை வேடத்தில் நடிப்பீர்களா சூரி? சூரியின் பதில் இதோ.. | குபேரா படத்தின் இசை வெளியீட்டு விழா அப்டேட்! | போதைப்பொருள் பயன்படுத்த தனி ரூம் வசதி ; பெண் தயாரிப்பாளர் பகீர் குற்றச்சாட்டு | வார்-2வில் விஜய்யின் ஸ்டைலை காப்பி அடித்த ஹிருத்திக் ரோஷன் | தள்ளிப்போகும் 'தொடரும்' பட ஓடிடி ரிலீஸ் | ஜெயிலரின் வில்லனாக நடிக்க இருந்தது மம்முட்டி தான் ; ரகசியம் உடைத்த வசந்த் ரவி |
1980 - 90களில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தவர் ரூபினி, ரஜினியுடன் 'மனிதன், ராஜா சின்ன ரோஜா' போன்ற படங்களில் நடித்தவர், கமலுடன் 'அபூர்வ சகோதரர்கள், மைக்கேல் மதன காமராஜன்' மற்றும் விஜயகாந்துடன் 'புலன் விசாரணை' என பல ஹிட் படங்களில் நடித்தார். ஒரு கட்டத்தில் திருமணம் செய்து கொண்டு மும்பையில் செட்டில் ஆகிவிட்டார்.
இந்த நிலையில் சமீபத்தில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சிறப்பு தரிசனம் செய்வதற்கு, அங்குள்ள விடுதியில் தங்குவதற்கு என சரவணன் என்ற நபர் ரூபினிடத்தில் ஒன்றரை லட்சம் ரூபாய் வாங்கி இருக்கிறார். ஆனால் அதையடுத்து திருப்பதி கோவிலில் தரிசனம் செய்வதற்கு எந்த ஏற்பாடும் செய்யாத அந்த நபர் திடீரென்று தலைமறைவாகி விட்டாராம். இதை அடுத்து தன்னை சரவணன் என்ற அந்த நபர் தன்னை மோசடி செய்துவிட்டதை அறிந்த ரூபினி, கடவுளின் பெயரை சொல்லி மோசடி செய்த அந்த நபர் மீது நடவடிக்கை எடுக்குமாறு ஆந்திர அரசுக்கு கோரிக்கை வைத்திருக்கிறார்.