இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
வடக்குப்பட்டி ராமசாமி, இங்கு நான்தான் கிங்கு படங்களுக்கு பிறகு டிடி ரிட்டர்ன்ஸ் என்ற படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார் சந்தானம். இந்த நிலையில் நேற்று திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அவர் சாமி தரிசனம் செய்திருக்கிறார். அது குறித்த ஒரு வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் பலரும் அவருக்கு வணக்கம் செலுத்த அதற்கு தானும் வணக்கம் செலுத்தியபடி கோவிலை நோக்கி அவர் நடந்து சென்று கொண்டிருக்கிறார். ஆனால் இந்த வீடியோவில் சந்தானத்தை காண்பிப்பதற்கு முன்பு ஒரு பெண் நடந்து வருவது போன்று காட்சி இடம் பெற்று இருக்கிறது. இதை பார்த்து நடிகர் சதீஷ் தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு கமெண்ட் கொடுத்திருக்கிறார். அதில், இந்த வீடியோவின் ஆரம்பத்தில் ஒரு பெண் நடந்து வருவதை பார்த்து சந்தானம்தான் பெண் கெட்டப்பில் வருகிறாரா என்று தான் குழம்பி போய் பார்த்ததாக தெரிவித்திருக்கிறார்.