‛கில்லர்' முதல்கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு ‛ஜெயிலர்-2'வில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | காரில் கோளாறு: ஷாரூக்கான், தீபிகா படுகோனே மீது வழக்கு | ‛வார் - 2' படம் தோல்வி அடைந்ததால் ஜூனியர் என்டிஆரின் அடுத்த படத்தை கைவிட்ட நிறுவனம்! | எனது சொகுசு பங்களா வீடியோவை உடனே நீக்குங்கள்! - ஆலியா பட் வைத்த ஆவேச கோரிக்கை | 23 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் ‛ரன்' | சிவகார்த்திகேயனுக்கு போட்டியா : ‛கேபிஒய்' பாலா பதில் | பிளாஷ்பேக்: திகைக்க வைக்கும் 'த்ரில்லர்' திரைப்படத்தின் நாயகனாக எம் என் நம்பியார் நடித்த “திகம்பர சாமியார்” | லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் ‛பர்ஸ்ட் பன்ச்' எப்படி இருக்கு? | மகுடம் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது! | ஷாலின் சோயாவின் இயக்குனர் ஆசை! |
சந்தானம் நடிப்பில் கடைசியாக 'டிடி நெக்ஸ்ட் லெவல்' என்ற படம் திரைக்கு வந்தது. அதையடுத்து சிம்புவின் 49வது படத்தில் ஒரு முக்கியமான வேடத்தில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார் சந்தானம். அதோடு, சிம்புவுக்காக மட்டுமே இந்த படத்தில் நடிக்கிறேன் என்றும் அவர் கூறியுள்ளார். இந்த நேரத்தில் தற்போது நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் ஜெயிலர்-2 படத்திலும் சந்தானத்தை காமெடி கலந்த ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க வைப்பதற்கு பேச்சுவார்த்தை நடந்து வருவதாக ஒரு தகவல் வெளியாகியிருக்கிறது. ஏற்கனவே ரஜினி நடித்த 'எந்திரன், லிங்கா' போன்ற படங்களில் காமெடியனாக நடித்துள்ள சந்தானம், இந்த ஜெயிலர்-2 படத்தில் காமெடி கலந்த வேடத்தில் நடிக்க சம்மதிப்பாரா? மாட்டாரா? என்பது விரைவில் தெரியவரும்.