‛கில்லர்' முதல்கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு ‛ஜெயிலர்-2'வில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | காரில் கோளாறு: ஷாரூக்கான், தீபிகா படுகோனே மீது வழக்கு | ‛வார் - 2' படம் தோல்வி அடைந்ததால் ஜூனியர் என்டிஆரின் அடுத்த படத்தை கைவிட்ட நிறுவனம்! | எனது சொகுசு பங்களா வீடியோவை உடனே நீக்குங்கள்! - ஆலியா பட் வைத்த ஆவேச கோரிக்கை | 23 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் ‛ரன்' | சிவகார்த்திகேயனுக்கு போட்டியா : ‛கேபிஒய்' பாலா பதில் | பிளாஷ்பேக்: திகைக்க வைக்கும் 'த்ரில்லர்' திரைப்படத்தின் நாயகனாக எம் என் நம்பியார் நடித்த “திகம்பர சாமியார்” | லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் ‛பர்ஸ்ட் பன்ச்' எப்படி இருக்கு? | மகுடம் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது! | ஷாலின் சோயாவின் இயக்குனர் ஆசை! |
பாடலாசிரியர் சினேகன், நடிகை கன்னிகா தம்பதிக்கு கடந்த ஜனவரி மாதம் இரண்டு பெண் குழந்தைகள் பிறந்தனர். இந்த குழந்தைகளுக்கு நடிகர் கமல்ஹாசன் காதல் மற்றும் கவிதை என்று பெயர் சூட்டினார். அதன் பிறகு தங்களது குழந்தைகளின் புகைப்படங்களை வெளியிட்டாலும், அவர்களின் முகத்தை காட்டாத சினேகன், கன்னிகா தம்பதியினர், தற்போது எக்ஸ் பக்கத்தில் தங்கள் இரண்டு குழந்தைகளின் முகத்தை காண்பித்து சில புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார்கள்.
அதோடு, சினேகன் வெளியிட்டுள்ள பதிவில், 'எங்கள் அன்பிற்குரிய ஊடக நண்பர்களுக்கும் திரையுலக உறவுகளுக்கும் வணக்கம். எங்கள் இரட்டை மகள்கள் காதல் கன்னிகா சினேகன், கவிதை கன்னிகா சினேகன் இருவரையும் உங்களுக்கு அறிமுகம் செய்வதில் பெரு மகிழ்ச்சி அடைகிறோம். எங்களை நேசிக்கும் உங்கள் அன்பு எங்கள் மகள்களையும் நேசிக்கட்டும். நன்றி என்றும் நட்புடன் சினேகன்' என்று அவர் ஒரு பதிவு போட்டுள்ளார்.