56வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் கவுரவிக்கப்படும் ரஜினிகாந்த்- பாலகிருஷ்ணா! | 25 கோடி பட்ஜெட்டில் உருவாகும் படத்தில் லோகேஷ் கனகராஜின் சம்பளம் 35 கோடியா? | அறக்கட்டளை மூலம் 75 பேரை படிக்க வைத்த பிளாக் பாண்டி! | ரஜினிக்கு நடிப்பு சொல்லிக் கொடுத்த வாத்தியாரின் மறைவு | “என் மகள் எனக்கு மூன்றாம் மனுஷி தான்.. அஞ்சு பைசா கூட தரமாட்டேன்” ; ஸ்வேதா மேனன் ஓபன் டாக் | எட்டு வருடத்திற்கு பிறகு மீண்டும் இணையும் துருவா சார்ஜா, ரச்சிதா ராம் ஜோடி | 'விலாயத் புத்தா' கதையும் 'புஷ்பா' கதையும் ஒன்றா ? பிரித்விராஜ் விளக்கம் | அதிதி ராவ் ஹைதரி பெயரில் வாட்ஸ்அப்பில் மோசடி ; நடிகை எச்சரிக்கை | தெலுங்கில் ரீமேக் ஆகும் 'லப்பர் பந்து' | ஆர்யாவிற்கு ஜோடியாகும் அனுபமா பரமேஸ்வரன்! |

'காற்று வெளியிடை, செக்கச் சிவந்த வானம்' உள்ளிட்ட தமிழ் மற்றும் தெலுங்கு, ஹிந்தி படங்களில் நடித்துள்ளவர் நடிகை அதிதி ராவ் ஹைதரி. நடிகர் சித்தார்த்துடன் இணைந்து நடித்தபோது அவருடன் காதல் வயப்பட்டு கடந்த வருடம் அவரை திருமணம் செய்து கொண்டு குடும்ப வாழ்க்கையில் செட்டில் ஆகியுள்ளார். இருப்பினும் செலெக்ட்டிவான படங்களிலும் நடித்து வருகிறார். இந்த நிலையில் தன்னுடைய பெயரில் மோசடி நபர் ஒருவர் வாட்ஸ் அப் மூலமாக பலரை ஏமாற்றும் நோக்கில் குறுஞ்செய்திகளை அனுப்பி மோசடியில் ஈடுபட்டுள்ளார் என ரசிகர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார் அதிதி.
இது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கம் மூலமாக ஒரு பதிவை வெளியிட்டுள்ள அதிதி ராவ் ஹைதரி, “பலருக்கும் என்னுடைய புகைப்படத்தை புரொபைல் ஐடி ஆக வைத்து என் பெயரை பயன்படுத்தி யாரோ ஒரு நபர் குறுஞ்செய்திகளை அனுப்பி வருகிறார். குறிப்பாக தன்னை வைத்து போட்டோஷூட் நடத்திக் கொள்ளலாம் என்பது போல சில ஆபர்களை தந்து மெசேஜ் அனுப்பி வருகிறார். ஆனால் அது நான் அல்ல. நான் ஒருபோதும் இதுபோன்று யாரிடமும் கூற மாட்டேன். அது மட்டுமல்ல என்னுடைய எந்த ஒரு பர்சனல் போன் நம்பரையும் வேலைகளுக்காக பயன்படுத்த மாட்டேன். எல்லாமே என்னுடைய குழுவினர் மூலமாகத்தான் நடக்கும்.. தயவு செய்து இதை கண்டு யாரும் ஏமாற வேண்டாம்” என ரசிகர்களுக்கும் திரையுலகை சேர்ந்தவர்களுக்கும் எச்சரிக்கை அளிக்கும் விதமாக அந்த பதிவில் கூறியுள்ளார் அதிதி ராவ் ஹைதரி.