சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி | குருநாதருக்கு நன்றி செலுத்தும் மிஷ்கின் | அடுத்த ஆண்டாவது ஒலிக்குமா என் இனிய தமிழ் மக்களே | கூலி படத்துக்கு விமர்சனம் : மவுனம் கலைத்த லோகேஷ் கனகராஜ் | தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? |

இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கிய 'கேஜிஎப்' படத்தில் இரண்டு பாகங்கள் மற்றும் 'சலார்' படத்தின் முதல் பாகம் ஆகியவற்றில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர் ரூபன் கவுடா. இந்த படங்களின் வெற்றிக்கு இயக்குனர் பிரசாந்த் நீலுடன் உறுதுணையாக இருந்த இவர், அடுத்ததாக ஜூனியர் என்டிஆரை வைத்து பிரசாந்த் நீல் இயக்கும் படத்திலும் ஒளிப்பதிவாளராக பணியாற்றுகிறார். இந்த நிலையில் புவன் கவுடாவுக்கும் நிகிதா என்பவருக்கும் சமீபத்தில் திருமணம் நடைபெற்றது.
இந்த திருமணத்தில் இயக்குனர் பிரசாந்த் நீல் தனது மனைவி லிகிதாவுடன் கலந்து கொண்டார். ஆச்சரியமாக இந்த திருமண நிகழ்வில் நடிகை ஸ்ரீ லீலாவும் கலந்துகொண்டு தனது உற்சாகத்தை வெளிப்படுத்தியுள்ளார். அது மட்டுமல்ல, திருமணத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் அவர் தனது சோசியல் மீடியாவில் பகிர்ந்து கொண்டுள்ளார்.
ஒளிப்பதிவாளர் புவன் கவுடா தெலுங்கில் சலார் என்கிற ஒரு படத்தில் மட்டுமே பணியாற்றிய நிலையில் அந்தப்படத்திலும் ஸ்ரீ லீலா நடித்திராத நிலையில் அவரது இந்த திருமணத்தில் அவர் கலந்து கொண்டிருப்பதால் பிரசாந்த் நீல் ஜூனியர் என்டிஆர் இணையும் படத்தில் கதாநாயகியாக நடிக்க இருக்கிறாரோ என்கிற யூகமும் தற்போது கிளம்பியுள்ளது. அதேசமயம் இந்த படத்தில் ருக்மணி வசந்த் தான் கதாநாயகியாக நடிக்கிறார் என்பது ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு விட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.