அஜித், ஆதிக் காம்போ உறுதி | கவின் நடித்துள்ள 'கிஸ்' படத்தின் சிங்கிள் பாடல் வெளியானது! | 'லியோ' படத்தில் உயிரிழந்த மடோனாவின் கேரக்டர் 'பென்ஸ்' படத்தில் உயிர் பெறுகிறதா? | சூர்யா 46வது படத்தின் பாடல் பயங்கரமாக வந்திருக்கு! - ஜி.வி.பிரகாஷ் குமார் வெளியிட்ட தகவல் | சிவராஜ்குமாருக்கு நான் சித்தப்பா மாதிரி! கமல்ஹாசன் வெளியிட்ட வீடியோ | உஸ்தாத் பகத்சிங்' படப்பிடிப்பில் பவன் கல்யாண் | தெலுங்கு இயக்குனர்களுடன் மூன்றாவது முறை கூட்டணியில் சூர்யா | 150 நாள் படப்பிடிப்பு நடந்த 'இரண்டு வானம்' | 'பரியேறும் பெருமாள்' முதல் சாய்ஸ் அதர்வா | பிளாஸ்டிக் சர்ஜரி ஆபரேஷன் செய்தாரா அதுல்யா |
புதுக்கோட்டை: மாணவனின் கோரிக்கையை ஏற்று, அறக்கட்டளை நிதியில் கிராமத்தில் அமைத்த குடிநீர் பிளான்டை, நடிகர் ராகவா லாரன்ஸ் திறந்து வைத்தார்.
புதுக்கோட்டை மாவட்டம், குருக்குலையாபட்டியைச் சேர்ந்த விஷ்ணு என்ற மாணவன், தனியார் தொலைக்காட்சி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பங்கேற்றார். அந்த நிகழ்ச்சியில் 'என் ஊர் மக்கள் குடிநீருக்காக நீண்ட துாரம் சென்று வருகின்றனர்; சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் பிளான்ட் அமைத்துக் கொடுத்தால் நன்றாக இருக்கும்' என, கோரிக்கை விடுத்தார்.
இந்த வீடியோவை பார்த்த லாரன்ஸ் உடனே தன் அறக்கட்டளை நிதியிலிருந்து, குருக்குலையாபட்டியில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் பிளான்ட் அமைத்துக் கொடுத்தார். அந்த பிளான்டை நேற்று ராகவா லாரன்ஸ் திறந்து வைத்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய லாரன்ஸ், ‛‛மாற்றம் அமைப்பின் மூலம் தொடர்ந்து நலத்திட்ட உதவிகளை செய்கிறோம். இதில் எந்த அரசியலும் இல்லை. எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் நாம ஒரு விஷயம் செய்யும்போது அதில் மகிழ்ச்சி இருக்கும். என்னால் முடிந்த உதவிகளை தொடர்ந்து செய்வேன்'' என்றார்.