மணிரத்னம் இயக்கத்தில் மீண்டும் நடிக்கும் சிம்பு! | மீண்டும் வாடிவாசல் தள்ளிப்போகிறதா? ரெட்ரோ படத்தின் புரமோஷனில் அடுத்த படத்தை அறிவித்த சூர்யா! | ஒரே நாளில் சந்தானம், சூரி படங்களுடன் மோதும் யோகி பாபு | 45 வயது சந்தானத்துக்கு அம்மாவான கஸ்தூரி ! | சுதாவின் அடுத்த பட ஹீரோ சிம்பு! - ‛வேட்டை நாய்' நாவல் படமாகிறது! | வெப் தொடரில் முதன்மை கதாபாத்திரத்தில் பிரியங்கா மோகன்! | நீண்ட வருடங்களுக்கு பிறகு இயக்குனர் அவதாரம் எடுக்கும் கே.எஸ். அதியமான்! | ‛மெய்யழகன்' குறித்து நெகிழ்ந்து பேசிய நானி! | பல விஷயங்களில் மனம் மாறிய நடிகை | 1000 கோடி வசூல் கனவுக்கு சிக்கல்: அதிர்ச்சியில் உச்ச நடிகர் |
சென்னை: சாமி, உங்களால் இந்தியாவிற்கே பெருமை என லண்டனில் முதல் சிம்பொனி நிகழ்ச்சியை அரங்கேற்ற உள்ள இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு நடிகர் ரஜினி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தேனி மாவட்டம், பண்ணைபுரத்தில் பிறந்த இளையராஜா, தனது அண்ணன் பாவலர் வரதராஜனால் தமிழக இசை உலகுக்கு அழைத்து வரப்பட்டார். 1500 படங்களுக்கு மேல் பல ஆயிரம் பாடல்களுக்கு இசையமைத்து இன்று உலக மக்களை தனது இசையால் வசியப்படுத்தி உள்ளார்.
'வேலியன்ட்' என்ற தலைப்பில் அவர் உருவாக்கிய தனது முதல் சிம்பொனி நிகழ்ச்சியை இன்று (மார்ச் 8) லண்டனில் உள்ள அப்போலோ அரங்கில் அரங்கேற்றம் செய்ய உள்ளார். முன்னதாக சென்னையில் அவரை முதல்வர் ஸ்டாலின், அண்ணாமலை உள்ளிட்ட அரசியல் கட்சியினர் நேரில் சந்தித்து வாழ்த்தினர். தொடர்ந்து லண்டன் கிளம்பும் முன் செய்தியாளர்களிடம் பேசிய இளையராஜா, இது எனது பெருமை அல்ல, நாட்டின் பெருமை என்றார்.
இந்நிலையில், இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு ரஜினி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுபற்றி எக்ஸ் தளத்தில் ரஜினி வெளியிட்ட பதிவில், ‛‛பண்ணைபுரத்தில் ஹார்மோனியம் வாசித்த கைகள், இன்று லண்டனில் சிம்பொனி படைக்கிறது. சாமி, உங்களால் இந்தியாவிற்கே பெருமை! பாராட்டுகள்'' என குறிப்பிட்டுள்ளார்.
பொதுவாக இளையராஜாவை ‛சாமி' என்றே அழைப்பார் ரஜினி. அதனாலேயே இன்று வாழ்த்தும் போதும் அவரை சாமி என குறிப்பிட்டுள்ளார் ரஜினி.