2025ல் அதிக சம்பளம் வாங்கும் தென்னிந்திய நடிகை யார் ? | மும்பையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளை விற்பனை செய்த பிரியங்கா சோப்ரா! | ரெட்ரோ படம் சூர்யாவுக்கு மகிழ்ச்சி கொடுத்துள்ளது! - கார்த்திக் சுப்பராஜ் | 500 கோடி நிகர வசூலைக் கடந்த 'ச்சாவா' | சினிமா துறையில் பாலின பாகுபாடு: மாதுரி தீக்சித் கவலை | பிரபு, வெற்றி இணைந்து நடித்து ரிலீசுக்கு தயாரான 'ராஜபுத்திரன்' | 'ஹிட் 3' பார்க்காதீர்கள்: நானி சொன்ன காரணம் தெரியுமா? | ''ரசிகர்கள் மாறிவிட்டாங்க...'': ஷில்பா ஷெட்டி | 'அவள்' பட இயக்குனருடன் இணைகிறாரா ரவி மோகன்? | பராசக்தி இந்த காலகட்டத்திற்கு பொருந்தும்! - ஆகாஷ் பாஸ்கரன் |
சென்னை: சாமி, உங்களால் இந்தியாவிற்கே பெருமை என லண்டனில் முதல் சிம்பொனி நிகழ்ச்சியை அரங்கேற்ற உள்ள இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு நடிகர் ரஜினி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தேனி மாவட்டம், பண்ணைபுரத்தில் பிறந்த இளையராஜா, தனது அண்ணன் பாவலர் வரதராஜனால் தமிழக இசை உலகுக்கு அழைத்து வரப்பட்டார். 1500 படங்களுக்கு மேல் பல ஆயிரம் பாடல்களுக்கு இசையமைத்து இன்று உலக மக்களை தனது இசையால் வசியப்படுத்தி உள்ளார்.
'வேலியன்ட்' என்ற தலைப்பில் அவர் உருவாக்கிய தனது முதல் சிம்பொனி நிகழ்ச்சியை இன்று (மார்ச் 8) லண்டனில் உள்ள அப்போலோ அரங்கில் அரங்கேற்றம் செய்ய உள்ளார். முன்னதாக சென்னையில் அவரை முதல்வர் ஸ்டாலின், அண்ணாமலை உள்ளிட்ட அரசியல் கட்சியினர் நேரில் சந்தித்து வாழ்த்தினர். தொடர்ந்து லண்டன் கிளம்பும் முன் செய்தியாளர்களிடம் பேசிய இளையராஜா, இது எனது பெருமை அல்ல, நாட்டின் பெருமை என்றார்.
இந்நிலையில், இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு ரஜினி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுபற்றி எக்ஸ் தளத்தில் ரஜினி வெளியிட்ட பதிவில், ‛‛பண்ணைபுரத்தில் ஹார்மோனியம் வாசித்த கைகள், இன்று லண்டனில் சிம்பொனி படைக்கிறது. சாமி, உங்களால் இந்தியாவிற்கே பெருமை! பாராட்டுகள்'' என குறிப்பிட்டுள்ளார்.
பொதுவாக இளையராஜாவை ‛சாமி' என்றே அழைப்பார் ரஜினி. அதனாலேயே இன்று வாழ்த்தும் போதும் அவரை சாமி என குறிப்பிட்டுள்ளார் ரஜினி.