விஜய் ஆண்டனியின் 'சக்தி திருமகன்' படத்தை பாராட்டிய இயக்குனர் ஷங்கர்! | பிளாஷ்பேக்: சித்ராவை ஏமாற்றிய முதல் பாடல் | படம் இயக்கவே சினிமாவிற்கு வந்தேன்: செம்மலர் அன்னம் | சின்னத்திரையில் இருந்து சினிமாவுக்கு வரும் இயக்குனர் | 10 கோடிக்கு கார் வாங்கிய அட்லி | பிளாஷ்பேக்: தமிழில் ரீமேக் ஆன சார்லி சாப்ளின் படம் | பிளாஷ்பேக்: சாண்டோ எம் எம் ஏ சின்னப்ப தேவருக்கு அதிர்ஷ்டத்தை வழங்கிய “ஆராய்ச்சி மணி” | 50 கோடி வசூலைக் கடந்த 'பைசன்' | தமிழில் இயக்குனர் ஆனார் ஷாலின் ஜோயா : 90களில் நடக்கும் கதை, பிரிகிடா ஹீரோயின் | பொங்கல் ரேசில் இணைந்த இன்னொரு படம் |

இயக்குனர் செல்வராகவன் சமீப காலமாக டைரக்ஷனை ஒதுக்கி வைத்து விட்டு முழு நேர நடிகராக மாறியுள்ளார். ஆனாலும் அவர் பல வருடங்களுக்கு முன்பு தனுஷை வைத்து இயக்கிய 'புதுப்பேட்டை' மற்றும் கார்த்தியை வைத்து இயக்கிய 'ஆயிரத்தில் ஒருவன்' ஆகிய இரண்டு படங்களுக்கும் இரண்டாம் பாகம் எடுக்க வேண்டும் என்று ரசிகர்களும் கோரிக்கை வைத்து வருகின்றனர். தனக்கும் அப்படி ஒரு எண்ணம் இருப்பதாகவும் கூறி வந்தார் செல்வராகவன்.
ஆனால் இன்னும் அதற்கான எழுத்து வடிவம் முழுமை பெறவில்லை என்று சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ள செல்வராகவன், இந்தப் படங்களின் இரண்டாம் பாகத்தில் தனுஷ் மற்றும் கார்த்தி நடிப்பார்களா என்கிற கேள்விக்கும் பதில் அளித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறும்போது, “கிட்டதட்ட 3 வருடங்களுக்கு தனுஷ் மற்றும் கார்த்தி ஆகியோரின் கால்ஷீட் கிடைக்காது. இன்னும் இந்த படங்களின் கதையையும் நான் முழுமையாக முடிக்கவில்லை. அதே சமயம் இந்த படங்களின் இறுதிக்காட்சிகளில் நான் மற்ற நடிகர்களை வைத்து முடித்திருப்பதால் தனுஷ், கார்த்தி இல்லாமலேயே இந்த படங்களின் இரண்டாம் பாகத்தை என்னால் எடுக்க முடியும்” என்றும் கூறியுள்ளார்.