அஜித், ஆதிக் காம்போ உறுதி | கவின் நடித்துள்ள 'கிஸ்' படத்தின் சிங்கிள் பாடல் வெளியானது! | 'லியோ' படத்தில் உயிரிழந்த மடோனாவின் கேரக்டர் 'பென்ஸ்' படத்தில் உயிர் பெறுகிறதா? | சூர்யா 46வது படத்தின் பாடல் பயங்கரமாக வந்திருக்கு! - ஜி.வி.பிரகாஷ் குமார் வெளியிட்ட தகவல் | சிவராஜ்குமாருக்கு நான் சித்தப்பா மாதிரி! கமல்ஹாசன் வெளியிட்ட வீடியோ | உஸ்தாத் பகத்சிங்' படப்பிடிப்பில் பவன் கல்யாண் | தெலுங்கு இயக்குனர்களுடன் மூன்றாவது முறை கூட்டணியில் சூர்யா | 150 நாள் படப்பிடிப்பு நடந்த 'இரண்டு வானம்' | 'பரியேறும் பெருமாள்' முதல் சாய்ஸ் அதர்வா | பிளாஸ்டிக் சர்ஜரி ஆபரேஷன் செய்தாரா அதுல்யா |
பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் புகழ் பெற்றவர் பாலாஜி முருகதாஸ். தமிழ் சினிமாவில் சர்ச்சைக்குள்ளாகி சமீபத்தில் வரவேற்பை பெற்ற பயர் படத்தின் மூலம் ஹீரோவாக அடியெடுத்து வைத்துள்ளார். மாடலிங்கில் தன் கேரியரை ஆரம்பித்த இவர் முதலில் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும், அதன் பிக்பாஸ் அல்டிமேட்டிலும் கலந்து கொண்டார். இதில், பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் டைட்டில் பட்டமும் வென்றார். தற்போது பயர் படத்தின் வெற்றிக் கொண்டாட்டத்தில் மிதந்து கொண்டிருக்கும் பாலாஜி முருகதாஸ் அண்மையில் மாடலிங் மற்றும் சினிமா துறையில் தனக்கு நேர்ந்த மோசமான அனுபவங்களை பகிர்ந்திருக்கிறார்.
அவர் கூறுகையில், 'ஆரம்பத்தில் மாடலிங் வாய்ப்பு தருவதாக சொல்லி வேறு படம் எடுக்க என்னை தயார் செய்தார்கள். மாடலிங் வாய்ப்பு கேட்கும் சில இடங்களில் வேறு ஒரு விஷயத்தை என்னிடம் எதிர்பார்த்தார்கள். ஓப்பனாகவும் கேட்டார்கள். அதை இப்போது நான் இங்கே சொல்ல முடியாது. எனக்கு பின்னாடி பேசியவர்களுக்கும், தூரோகம் செய்தவர்களுக்கும் என்னுடய அடுத்த படம் தான் பதில். நான் வளரக்கூடாது என்று நினைப்பவர்களுக்கு நான் சொல்வது என்னவென்றால் நான் இப்படியே இருக்கமாட்டேன். எல்லா தடைகளையும் தகர்த்து வெற்றி பெறுவேன்' என கூறியுள்ளார். மேலும் பிக்பாஸ் வீட்டில் கலந்து கொண்டால் ஒரு கோடி கிடைக்கும் என நினைத்து கலந்து கொண்டேன். ஆனால், எனக்கு அவர்கள் 45 லட்சம் தான் சம்பளமாக தந்தார்கள் என்றும் அந்த நிகழ்ச்சி மேடையிலேயே பாலாஜி முருகதாஸ் ஓப்பனாக கூறியுள்ளார்.