ப்ரோ கோட் டைட்டில் விவகாரம் : நீதிமன்ற விசாரணையில் ரவி மோகனுக்கு சாதகம் | ‛கில்' பட ரீமேக்கில் இருந்து விலகிய துருவ் விக்ரம் | வாட்ச் மீதுள்ள காதல் குறித்து தனுஷ் | ரஜினி வெளியிட்ட ‛வித் லவ்' | 100 மில்லியன் பார்வைகளை கடந்த ‛ஊறும் பிளட்' | கமல், ரஜினி இணையும் படம் : 'மகாராஜா' நித்திலன் இயக்குகிறாரா? | 50 ஆண்டுகளுக்குபின் 150வது நாளை கொண்டாடும் படம் எது தெரியுமா? | சிவகார்த்திகேயன் வளர்ச்சி எப்படி : கீர்த்தி சுரேஷ் சொன்ன பதில் | மாஸ்க் பட ரிசல்ட் நிலவரம் : ஆண்ட்ரியா வீட்டு நிலைமை? | அனைத்து மதங்களின் ரசிகன் நான் : ஏஆர் ரஹ்மான் |

நாளை மார்ச் 7ம் தேதி 9 படங்கள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அவற்றில் ஷாம் நடித்துள்ள 'அஸ்திரம்' படம் பின் வாங்கிவிட்டது. போதுமான அளவில் தியேட்டர்கள் கிடைக்கவில்லை என்பதால் படத்தைத் தள்ளி வைக்கிறோம் என நேற்றே அறிவித்துவிட்டார்கள். புது வெளியீட்டுத் தேதியை விரைவில் அறிவிக்க உள்ளதாகச் சொல்லி இருக்கிறார்கள்.

அதனால், நாளை 8 படங்கள் வெளியாக உள்ளது. “அம்பி, படவா, ஜென்டில்வுமன், கிங்ஸ்டன், லெக் பீஸ், மர்மர், நிறம் மாறும் உலகில், எமகாதகி'' ஆகிய படங்கள்தான் அவை. 'ஜென்டில்வுமன், மர்மர், நிறம் மாறும் உலகில், எமகாதகி' படங்களின் பத்திரிகையாளர் காட்சிகள் நடந்து முடிந்துள்ளன.
அவற்றில் 'எமகாதகி' படத்தைப் பலரும் பாராட்டியுள்ளார்கள். அறிமுக இயக்குனர் பெப்பின் ஜார்ஜ் ஜெயசீலன் இப்படத்தை இயக்கியுள்ளார். 1997ம் ஆண்டு வெளிவந்த 'கடவுள்' படத்தில் அறிமுகமான வெங்கட ராகுல் இப்படத்தைத் தயாரித்துள்ளார். இறந்த பிறகும் ஒரு பெண் செய்யும் போராட்டம்தான் இப்படத்தின் கதை. பத்திரிகையாளர்கள் பாராட்டியதை படக்குழு சரியாகக் கொண்டு போய் மக்களிடம் சேர்த்தால் இப்படம் வரவேற்பைப் பெற வாய்ப்புள்ளது.




