பிராமணர்கள் குறித்து அவதுாறு கருத்து: மன்னிப்பு கேட்டார் 'மஹாராஜா' நடிகர் | சினிமாவை வாழ விடுங்கள்: நடிகை விஜயசாந்தி | 'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? |
நாளை மார்ச் 7ம் தேதி 9 படங்கள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அவற்றில் ஷாம் நடித்துள்ள 'அஸ்திரம்' படம் பின் வாங்கிவிட்டது. போதுமான அளவில் தியேட்டர்கள் கிடைக்கவில்லை என்பதால் படத்தைத் தள்ளி வைக்கிறோம் என நேற்றே அறிவித்துவிட்டார்கள். புது வெளியீட்டுத் தேதியை விரைவில் அறிவிக்க உள்ளதாகச் சொல்லி இருக்கிறார்கள்.
அதனால், நாளை 8 படங்கள் வெளியாக உள்ளது. “அம்பி, படவா, ஜென்டில்வுமன், கிங்ஸ்டன், லெக் பீஸ், மர்மர், நிறம் மாறும் உலகில், எமகாதகி'' ஆகிய படங்கள்தான் அவை. 'ஜென்டில்வுமன், மர்மர், நிறம் மாறும் உலகில், எமகாதகி' படங்களின் பத்திரிகையாளர் காட்சிகள் நடந்து முடிந்துள்ளன.
அவற்றில் 'எமகாதகி' படத்தைப் பலரும் பாராட்டியுள்ளார்கள். அறிமுக இயக்குனர் பெப்பின் ஜார்ஜ் ஜெயசீலன் இப்படத்தை இயக்கியுள்ளார். 1997ம் ஆண்டு வெளிவந்த 'கடவுள்' படத்தில் அறிமுகமான வெங்கட ராகுல் இப்படத்தைத் தயாரித்துள்ளார். இறந்த பிறகும் ஒரு பெண் செய்யும் போராட்டம்தான் இப்படத்தின் கதை. பத்திரிகையாளர்கள் பாராட்டியதை படக்குழு சரியாகக் கொண்டு போய் மக்களிடம் சேர்த்தால் இப்படம் வரவேற்பைப் பெற வாய்ப்புள்ளது.