லாயராக அதுல்யா ரவி, மீனவனாக நான் : டீசல் ரகசியம் சொல்லும் ஹரிஷ் கல்யாண் | காதல், நகைச்சுவை கதைகளில் நடிக்க ஆர்வமாக இருக்கும் ருக்மணி வசந்த் | விண்வெளியில் நான்காவது திருமணம் செய்கிறாரா ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் | அஜித் 64வது படத்தின் அறிவிப்பு எப்போது? : ஆதிக் ரவிச்சந்திரன் தகவல் | ஓடிடிக்கு வருகிறது லோகா சாப்டர் 1 | டியூட் படத்தில் பிரதீப் பாடிய ‛சிங்காரி' பாடல் வெளியானது | தனுஷ் படத்தின் நாயகி யார்... நீடிக்கும் குழப்பம்? | ஜீவா, ராஜேஷ் படத்தில் இணையும் ரம்யா ரங்கநாதன் | ‛பேராண்டி' படத்தில் மனோரமா பாடிய கடைசி பாடல் | 'பைசன்' என் முதல் படம் மாதிரி: துருவ் விக்ரம் |
நடிகரும், பாடகருமான மறைந்த ராகவேந்தர் மகள் கல்பனா ராகவேந்தர். தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் பல பாடல்களைப் பாடியுள்ளார். டிவி நிகழ்ச்சிகளில் நடுவராகவும் இருந்துள்ளார். பாலா இயக்கத்தில், சூர்யா, ஜோதிகா நடித்த 'மாயாவி' படத்தில் அவர் பாடிய 'கடவுள் தந்த' பாடலை யாரும் மறக்க முடியாது.
சில தினங்களுக்கு முன்பு ஐதராபாத்தில் அவர் தற்கொலை செய்து கொள்ள முயற்சித்ததாகத் தகவல் வெளியானது. அவரை உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை பெற்று தற்போது முன்னேறி வருவதாகத் தகவல்.
கல்பனாவின் மகள் தயா பிரசாத் தனது அம்மா உடல்நிலை குறித்து நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்தார். “எனது அம்மாவுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. அவர் நலமாக உள்ளார். அவர் எல்எல்பி மற்றும் பிஎச்டி படித்து வருகிறார். அவருக்கு தூக்கமின்மை பிரச்சனை இருக்கிறது. அதனால், அதற்காக மருந்துகளை உட்கொள்வார். அப்படி சாப்பிடும் போது கொஞ்சம் அதிகமாகிவிட்டது. இது தற்கொலை முயற்சியல்ல. யாரும் இதை வேறுவிதமாக மாற்றிப் பேச வேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன்,” என்று கூறியுள்ளார்.
போலீஸ் விசாரணையில், வழக்கமாக 8 மாத்திரைகளை மட்டுமே சாப்பிடுவேன். இருந்தாலும் தூக்கமே வரவில்லை. எனவே மேலும் 10 மாத்திரைகளை சாப்பிட்டேன். அதன்பின் என்ன நடந்ததென்று தெரியவில்லை என கல்பனா தெரிவித்துள்ளார்.