எனக்கும் ஒரு எதிர்காலம் உள்ளது... வதந்தி பரப்பாதீங்க : பவித்ரா லட்சுமி | பிரியங்கா மோகனின் துருக்கி கனவு நனவானது | லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி - அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | கார் பந்தய பயிற்சியின்போது மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித் | ரீ-ரிலீஸில் சச்சின் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு | விவாகரத்து நெருங்கிவிட்டது என பதிவு போட்ட ரசிகருக்கு சோனாக்ஷி கொடுத்த பதிலடி | ரயில் ஜன்னல் கம்பி வழியாக மாளவிகா மோகனனிடம் முத்தம் கேட்ட மர்ம நபர் | ரெட்ரோ படத்தின் டிரைலரை உருவாக்கிய அல்போன்ஸ் புத்ரன் | கேரள அரசு விருதை கட்டி அணைத்தபடி தூங்கிய பிரேமலு நடிகர் : வைரலாகும் புகைப்படம் | போதை பொருள் வழக்கு : நடிகர் சைன் டாம் சாக்கோ கைது |
மிஷ்கின் இயக்கிய ‛முகமூடி' படத்தில்தான் சினிமாவில் அறிமுகமானார் பூஜா ஹெக்டே. அதன் பிறகு பட வாய்ப்புகள் இல்லாமல் ஹிந்திக்கு சென்றபோதும், நடித்த படங்கள் தோல்வியாக அமைந்ததால், பின்னர் தெலுங்கு சினிமாவில் என்ட்ரி கொடுத்த பூஜா ஹெக்டேவுக்கு ‛டிஜே துவாடா, ஜெகநாதம், அரவிந்த சமேதா, அல வைகுண்ட புறமுல்லோ' உள்ளிட்ட பல படங்கள் வெற்றியை கொடுத்தன. அதன் பிறகு தான் மீண்டும் அவர் தமிழில் விஜய்யுடன் ‛பீஸ்ட்' படத்தில் ரீஎன்ட்ரி கொடுத்தார்.
தற்போது விஜய்யுடன் ‛ஜனநாயகன்', சூர்யாவுடன் ‛ரெட்ரோ', லாரன்ஸ் உடன் ‛காஞ்சனா- 4' போன்ற படங்களில் நடித்து வருகிறார் பூஜாஹெக்டே. இந்த நிலையில் சமீபத்தில் அவர் அளித்த ஒரு பேட்டியில், தான் நடித்த அல வைகுந்த புறமுல்லோ என்ற தமிழ் படம் தனது கேரியரில் மிகப்பெரிய ஹிட் படம் என்று கூறியிருந்தார். ஆனால் இது தெலுங்கு படம் என்பதை அவர் தமிழ் படம் என்று கூறியதற்கு தெலுங்கு ரசிகர்கள் கடுமையாக அவரை விமர்சனம் செய்தார்கள். தெலுங்குக்கும் தமிழுக்கும் வித்தியாசம் கூடத் தெரியாமலா படங்களில் நடிக்கிறீர்கள் என்று சோசியல் மீடியாவில் அவரை ட்ரோல் செய்தார்கள். இந்த நிலையில், தான் சொன்னது தவறு என்று ஒப்புக்கொண்டுள்ள பூஜாஹெக்டே, ஏதோ தவறுதலாக அப்படி சொல்லி விட்டேன். தெலுங்கு சினிமாவிற்கு எப்போதும் நான் நன்றி உள்ளவளாக இருப்பேன் என்று தெரிவித்து தெலுங்கு ரசிகர்களை சமாதானப்படுத்தி உள்ளார்.