மதராஸி ‛கம்பேக்' கொடுக்கும் படமாக இருக்கும் என்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ் | 'ஏஸ்' தோல்வியிலிருந்து ஏறி வந்த விஜய் சேதுபதி | ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்த மாதம்பட்டி ரங்கராஜ் இரண்டாவது திருமணம் | வாடகை வீட்டில் வசிப்பது ஏன் ? பாலிவுட் நடிகர் அனுபம் கெர் ஆச்சரிய விளக்கம் | அஜித்தை வைத்து ஆக்ஷன் படம் இயக்க லோகேஷ் கனகராஜ் ஆசை | ராஷ்மிகாவின் மைசா படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது | பிளாஷ்பேக் : வரிசை கட்டிவந்த யுத்த பிரச்சாரத் திரைப்படங்கள் | அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிப்பதை உறுதி செய்த லோகேஷ் கனகராஜ் | வெற்றிமாறன், சிம்பு படத்தின் புதிய அப்டேட் | ஆகஸ்ட் 1ல் பல படங்கள் போட்டி.. |
மிஷ்கின் இயக்கிய ‛முகமூடி' படத்தில்தான் சினிமாவில் அறிமுகமானார் பூஜா ஹெக்டே. அதன் பிறகு பட வாய்ப்புகள் இல்லாமல் ஹிந்திக்கு சென்றபோதும், நடித்த படங்கள் தோல்வியாக அமைந்ததால், பின்னர் தெலுங்கு சினிமாவில் என்ட்ரி கொடுத்த பூஜா ஹெக்டேவுக்கு ‛டிஜே துவாடா, ஜெகநாதம், அரவிந்த சமேதா, அல வைகுண்ட புறமுல்லோ' உள்ளிட்ட பல படங்கள் வெற்றியை கொடுத்தன. அதன் பிறகு தான் மீண்டும் அவர் தமிழில் விஜய்யுடன் ‛பீஸ்ட்' படத்தில் ரீஎன்ட்ரி கொடுத்தார்.
தற்போது விஜய்யுடன் ‛ஜனநாயகன்', சூர்யாவுடன் ‛ரெட்ரோ', லாரன்ஸ் உடன் ‛காஞ்சனா- 4' போன்ற படங்களில் நடித்து வருகிறார் பூஜாஹெக்டே. இந்த நிலையில் சமீபத்தில் அவர் அளித்த ஒரு பேட்டியில், தான் நடித்த அல வைகுந்த புறமுல்லோ என்ற தமிழ் படம் தனது கேரியரில் மிகப்பெரிய ஹிட் படம் என்று கூறியிருந்தார். ஆனால் இது தெலுங்கு படம் என்பதை அவர் தமிழ் படம் என்று கூறியதற்கு தெலுங்கு ரசிகர்கள் கடுமையாக அவரை விமர்சனம் செய்தார்கள். தெலுங்குக்கும் தமிழுக்கும் வித்தியாசம் கூடத் தெரியாமலா படங்களில் நடிக்கிறீர்கள் என்று சோசியல் மீடியாவில் அவரை ட்ரோல் செய்தார்கள். இந்த நிலையில், தான் சொன்னது தவறு என்று ஒப்புக்கொண்டுள்ள பூஜாஹெக்டே, ஏதோ தவறுதலாக அப்படி சொல்லி விட்டேன். தெலுங்கு சினிமாவிற்கு எப்போதும் நான் நன்றி உள்ளவளாக இருப்பேன் என்று தெரிவித்து தெலுங்கு ரசிகர்களை சமாதானப்படுத்தி உள்ளார்.