லாயராக அதுல்யா ரவி, மீனவனாக நான் : டீசல் ரகசியம் சொல்லும் ஹரிஷ் கல்யாண் | காதல், நகைச்சுவை கதைகளில் நடிக்க ஆர்வமாக இருக்கும் ருக்மணி வசந்த் | விண்வெளியில் நான்காவது திருமணம் செய்கிறாரா ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் | அஜித் 64வது படத்தின் அறிவிப்பு எப்போது? : ஆதிக் ரவிச்சந்திரன் தகவல் | ஓடிடிக்கு வருகிறது லோகா சாப்டர் 1 | டியூட் படத்தில் பிரதீப் பாடிய ‛சிங்காரி' பாடல் வெளியானது | தனுஷ் படத்தின் நாயகி யார்... நீடிக்கும் குழப்பம்? | ஜீவா, ராஜேஷ் படத்தில் இணையும் ரம்யா ரங்கநாதன் | ‛பேராண்டி' படத்தில் மனோரமா பாடிய கடைசி பாடல் | 'பைசன்' என் முதல் படம் மாதிரி: துருவ் விக்ரம் |
ஸ்ரீவில்லிபுத்தூர் : விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் திருப்பாவை திவ்யபாசுரம் ஆன்மிக கலை நிகழ்ச்சி நடந்தது. இதில் திருத்தண்டி நாராயண ராமானுஜர் ஜீயர் சுவாமிகள், சடகோப ராமானுஜ ஜீயர் சுவாமிகள், இசையமைப்பாளர் இளையராஜா பங்கேற்றனர்.
இதனை முன்னிட்டு நேற்று மாலை 6:00 கோயிலுக்கு வந்த இவர்கள் மணவாள மாமுனிகள் சன்னதி, ஆண்டாள், பெரிய பெருமாள், பெரியாழ்வார், ராமானுஜர் சன்னதிகளில் சுவாமி தரிசனம் செய்தனர்.
பின் இரவு 8:35 மணிக்கு திருப்பாவை திவ்யபாசுரம் நிகழ்ச்சிகளை துவக்கி வைத்து திருத்தண்டி நாராயண ராமானுஜர் ஜீயர் சுவாமிகள், சடகோப ராமானுஜ ஜீயர் சுவாமிகள், இளையராஜா பேசினர். ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
விழாவில் விஸ்வ ஹிந்து பரிஷத் தென் பாரத அமைப்பாளர் சரவண கார்த்திக், அறநிலையத்துறை இணை ஆணையர் செல்லத்துரை, பல்வேறு அரசு துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.
விழா ஏற்பாடுகளை ஸ்ரீனிவாச வெங்கடேஷ அய்யங்கார் குழுவினர் செய்திருந்தனர்.