ரவிதேஜாவின் 76வது படம் ரிலீஸ் தேதியுடன் அறிவிப்பு | நடிகர் விநாயகனின் விமர்சனத்திற்கு நடிகர் சலீம் குமாரின் மகன் பதில் | தனுஷ் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் கிர்த்தி சனோன் | புதிய ஆரம்பம் - நடிகர் கிருஷ்ணா இரண்டாவது திருமணம் | பிரித்விராஜ் படத்திலிருந்து நீக்கப்பட்டேன் ; ஜோஜூ ஜார்ஜ் | மகளுக்கு டைட்டில் கார்டில் இடம் கொடுத்த மணிரத்னம் ; நன்றி சொன்ன குஷ்பு | 'கல்கி 2' படத்திலிருந்தும் தீபிகா படுகோனே விலகல்? | இந்தியன் 2 படத்தை விட குறைவாக வசூலித்த தக் லைப் | மீண்டும் தள்ளிப் போகும் 'ஹரிஹர வீர மல்லு' | சிம்பு படத்தை இயக்குகிறாரா வெற்றிமாறன்? |
எத்தனை விதமாக தடுக்க முயற்சி செய்தாலும் நாளுக்கு நாள் முன்னேறும் தொழில்நுட்பங்கள் காரணமாக சைபர் கிரைம் குற்றங்கள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன. பிரபலங்களை குறி வைத்து தான் விஷமிகள் இது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். இதற்கு முன்பாக பல பிரபலங்களும் தங்களது இன்ஸ்டாகிராம், எக்ஸ் (ட்விட்டர்) கணக்குகள் தான் ஹேக் செய்யப்பட்டதாக கூறியதை பார்த்து உள்ளோம். தற்போது ஆச்சரியமாக பிரபல ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் மற்றும் பாகுபலி படத்தின் தயாரிப்பாளர் ஷோபு எர்லகடா ஆகியோரின் வாட்ஸ் அப் கணக்குகள் சில மர்ம நபர்களால் ஹேக் செய்யப்பட்டுள்ளன.
சமீபத்திய பாகுபலி தயாரிப்பாளர் ஷோபு எர்லகடா தனது எக்ஸ் வலைதளப் பக்கம் மூலமாக தனது வாட்ஸ்அப் கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இதைத்தொடர்ந்து ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் தனது வாட்ஸ்அப் கணக்கும் யாராலோ ஹேக் செய்யப்பட்டுள்ளது என்றும் தயவு செய்து தன் பெயரில் ஏதேனும் மெசேஜ் வந்தால் அதை நம்பவோ பெரிதுபடுத்தவோ வேண்டாம் என்றும் தனது இன்ஸ்டாகிராம் பக்கம் மூலமாக தனது நண்பர்கள், உறவினர்கள் வட்டத்திற்கு தெரியப்படுத்தி உள்ளார். சந்தோஷ் சிவனின் உதவியாளர் வாட்ஸ்அப் கணக்கும் சேர்ந்து ஹேக் செய்யப்பட்டுள்ளது இதில் குறிப்பிடத்தக்கது.