மதராஸி ‛கம்பேக்' கொடுக்கும் படமாக இருக்கும் என்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ் | 'ஏஸ்' தோல்வியிலிருந்து ஏறி வந்த விஜய் சேதுபதி | ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்த மாதம்பட்டி ரங்கராஜ் இரண்டாவது திருமணம் | வாடகை வீட்டில் வசிப்பது ஏன் ? பாலிவுட் நடிகர் அனுபம் கெர் ஆச்சரிய விளக்கம் | அஜித்தை வைத்து ஆக்ஷன் படம் இயக்க லோகேஷ் கனகராஜ் ஆசை | ராஷ்மிகாவின் மைசா படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது | பிளாஷ்பேக் : வரிசை கட்டிவந்த யுத்த பிரச்சாரத் திரைப்படங்கள் | அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிப்பதை உறுதி செய்த லோகேஷ் கனகராஜ் | வெற்றிமாறன், சிம்பு படத்தின் புதிய அப்டேட் | ஆகஸ்ட் 1ல் பல படங்கள் போட்டி.. |
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் உருவான 'புஷ்பா 2' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி முதல் பாகத்தைப் போலவே மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்திலும் நாயகன் அல்லு அர்ஜுன், நாயகி ராஷ்மிகா மற்றும் வில்லன் பஹத் பாசில் ஆகியோரின் நடிப்பு ரசிகர்களை மிகவும் கவர்ந்துள்ளது. குறிப்பாக முதல் பாகத்தை விட இந்த இரண்டாம் பாகத்தில் நடிகர் பஹத் பாசிலுக்கு நடிப்பதற்கான வாய்ப்பு அதிகமாக கொடுக்கப்பட்டிருந்தது. அவருக்கான காட்சிகளும் ரொம்பவே மாஸாக அமைந்திருந்தன. அவரது நடிப்பிற்கு ரசிகர்கள் தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் தெலுங்கு நடிகை ருஹானி சர்மா புஷ்பா 2 திரைப்படம் பார்க்க தனது குடும்பத்தினருடன் திரையரங்கிற்கு சென்றுள்ளார். பஹத் பாசிலின் அறிமுகக் காட்சியில் அவர் வரும்போது அவர்தானா என்று ருஹாணி சர்மாவுக்கு ஒரு சந்தேகம் வந்துவிட்டதாம்.. அருகில் அமர்ந்திருந்த தனது சகோதரரிடம் இது பஹத் பாசில் தானே என்று கேட்டு தெரிந்து கொண்டாராம்.
இது குறித்து தனது சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டுள்ள ருஹாணி சர்மா, “நான் பஹத் பாசிலின் தீவிர ரசிகை. இந்தப்படத்தில் அவரது என்ட்ரிக்காக ரொம்பவே ஆர்வமாக காத்துக் கொண்டிருந்தேன். அதுவும் கடைசியில் நிகழ்ந்தது. ஆனால் என்னால் உடனடியாக அதை உணர முடியவில்லை. அதன் பிறகு அருகில் இருந்த என் சகோதரரிடம் இது பஹத் பாசில் தானே என்று கேட்டு தெரிந்து கொண்டேன். அந்த அளவிற்கு பஹத் பாசில் தனது ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் தன்னை வித்தியாசமான உருமாற்றம் செய்து கொள்கிறார். அந்த காட்சியை பார்த்ததும் எனக்கு புல்லரித்தது” என்று கூறியுள்ளார்.