ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் | தக் லைப் - நடிகர் ரகுமான் மகள் அறிமுகம்: ஏஆர் ரகுமான் வாழ்த்து | மகன் அகில் திருமணம்: அம்மா அமலா நெகிழ்ச்சிப் பதிவு | 'கல்கி 2' படத்தில் தீபிகா நடிக்கிறார்: விலகல் செய்தி வதந்தி… | கூலி படத்தில் இணைந்த டி.ராஜேந்தர் | லவ் மேரேஜ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | ஒரே பாகமாக ரீ ரிலீஸ் ஆகும் பாகுபலி | படு கவர்ச்சிக்கு மாறப்போகும் ராஷ்மிகா |
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் உருவான 'புஷ்பா 2' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி முதல் பாகத்தைப் போலவே மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்திலும் நாயகன் அல்லு அர்ஜுன், நாயகி ராஷ்மிகா மற்றும் வில்லன் பஹத் பாசில் ஆகியோரின் நடிப்பு ரசிகர்களை மிகவும் கவர்ந்துள்ளது. குறிப்பாக முதல் பாகத்தை விட இந்த இரண்டாம் பாகத்தில் நடிகர் பஹத் பாசிலுக்கு நடிப்பதற்கான வாய்ப்பு அதிகமாக கொடுக்கப்பட்டிருந்தது. அவருக்கான காட்சிகளும் ரொம்பவே மாஸாக அமைந்திருந்தன. அவரது நடிப்பிற்கு ரசிகர்கள் தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் தெலுங்கு நடிகை ருஹானி சர்மா புஷ்பா 2 திரைப்படம் பார்க்க தனது குடும்பத்தினருடன் திரையரங்கிற்கு சென்றுள்ளார். பஹத் பாசிலின் அறிமுகக் காட்சியில் அவர் வரும்போது அவர்தானா என்று ருஹாணி சர்மாவுக்கு ஒரு சந்தேகம் வந்துவிட்டதாம்.. அருகில் அமர்ந்திருந்த தனது சகோதரரிடம் இது பஹத் பாசில் தானே என்று கேட்டு தெரிந்து கொண்டாராம்.
இது குறித்து தனது சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டுள்ள ருஹாணி சர்மா, “நான் பஹத் பாசிலின் தீவிர ரசிகை. இந்தப்படத்தில் அவரது என்ட்ரிக்காக ரொம்பவே ஆர்வமாக காத்துக் கொண்டிருந்தேன். அதுவும் கடைசியில் நிகழ்ந்தது. ஆனால் என்னால் உடனடியாக அதை உணர முடியவில்லை. அதன் பிறகு அருகில் இருந்த என் சகோதரரிடம் இது பஹத் பாசில் தானே என்று கேட்டு தெரிந்து கொண்டேன். அந்த அளவிற்கு பஹத் பாசில் தனது ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் தன்னை வித்தியாசமான உருமாற்றம் செய்து கொள்கிறார். அந்த காட்சியை பார்த்ததும் எனக்கு புல்லரித்தது” என்று கூறியுள்ளார்.