நடிகைகளை இதற்கு மட்டுமே பயன்படுத்துகிறார்கள் : ராதிகா ஆப்தே ஆதங்கம் | சென்சாரில் சிக்கிய பல்டி பட ஹீரோவின் படம் : உயர்நீதிமன்ற நீதிபதிக்காக தனிக்காட்சி திரையீடு | நிபந்தனையுடன் துல்கர் சல்மானின் லேண்ட்ரோவர் கார் திரும்ப ஒப்படைப்பு | கூகுள் கிளவுட் உடன் இணைந்த ஏஆர் ரஹ்மான் | எனக்கு பிடித்தமான ஹீரோ நானி : ருக்குமணி வசந்த் | சூர்யா 47- வது படத்தில் இணையும் பஹத் பாசில் | நீதிமன்றம் கெடுபிடி : வெளிநாட்டு பயணத்தை ரத்து செய்த ஷில்பா ஷெட்டி | அப்பா வேடத்தில் கலக்கிய சரத்குமார், பசுபதி | பவன் கல்யாண் படத்தை இயக்கும் போட்டியில் லோகேஷ், வினோத் | மீண்டும் இணையும் நாகர்ஜூனா, அனுஷ்கா ஜோடி |
ஆர்.ஜே.பாலாஜி இயக்கியுள்ள கருப்பு படத்தை அடுத்து தற்போது தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கும் படத்தில் நடித்து வருகிறார் சூர்யா. மமிதா பைஜூ நாயகியாக நடிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்த படத்தை அடுத்து மலையாள இயக்குனர் ஜீத்து மாதவன் இயக்கும் தனது 47 வது படத்தில் நடிக்க போகிறார் சூர்யா. ஆக் ஷன் கதையில் உருவாகும் இப்படத்தில் சூர்யா போலீஸ் வேடத்தில் நடிக்கிறார். மேலும், இதற்கு முன்பு ஜீத்து மாதவன் இயக்கிய ஆவேசம் என்ற படத்தில் நாயகனாக நடித்த பகத் பாஸில் இந்த சூர்யா 47 வது படத்தில் வில்லனாக நடிக்கிறார். அதோடு பகத்பாசிலின் மனைவியான நடிகை நஸ்ரியா இந்த படத்தில் நாயகியாக நடிப்பதாகவும் கூறப்படுகிறது.