இந்த முட்டாள் யார் : ஸ்ரேயா கோபம் | பெண் குழந்தைக்கு அப்பாவான பிரேம்ஜி அமரன் | டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' | தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? |

‛96, மெய்யழகன்' ஆகிய படங்களை இயக்கியவர் பிரேம் குமார். கடந்த மாதத்தில் இவர் அடுத்து விக்ரமின் 64வது படத்தை இயக்குகிறார். இதனை வேல்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கின்றனர் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.
அதன் பிறகு பிரேம் அளித்த பேட்டியில் ஒரு சில காரணங்களால் விக்ரம் 64 படம் தள்ளிப்போகிறது. இதனால் அடுத்து உடனடியாக பஹத் பாசிலை வைத்து முழு நீள தமிழ் படம் இயக்குவதாக தெரிவித்திருந்தார்.
தற்போது ஐசரி கணேஷ் லண்டனில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் அவர் கூறியதாவது, "பிரேம் குமார், பஹத் பாசில் கூட்டணியில் உருவாகும் படத்தை வேல்ஸ் நிறுவனம் தான் தயாரிக்கின்றோம். இந்த படத்தின் படப்பிடிப்பை விரைவில் தொடங்கவுள்ளோம். இந்த படம் பஹத் பாசிலுக்கு இன்னொரு ஆவேசம் படம் போன்று இருக்கும்," எனக் கூறினார்.