படம்... பாராட்டு... பயம்... மனம் திறந்த ஸ்ரீகணேஷ் | நானும் மக்கள் பிரதிநிதி தான் - மதுவந்தி | விஷால் கோரிக்கையை நிராகரித்த சினிமா அமைப்புகள் | வெற்றிக்காக காத்திருக்கும் அப்பாவும், மகனும் | ஆட்டுக்கார அலமேலு, கல்யாணராமன், சுல்தான் : ஞாயிறு திரைப்படங்கள் | விக்ரமிற்கு ஜோடியாகும் ருக்மணி வசந்த் | கூலி படத்தில் வலிமையான கதாபாத்திரத்தில் நடிக்கிறேன் : ஸ்ருதிஹாசன் | கீரவாணிவுடன் கம்போசிங் பணியில் ராஜமவுலி | வார் 2 படத்திற்காக மீண்டும் சிக்ஸ்பேக்கிற்கு மாறிய ஜூனியர் என்டிஆர் | கூலி படத்தில் ரஜினிக்காக லோகேஷ் கனகராஜ் செய்த மாற்றம் |
தெலுங்குத் திரையுலகத்தின் இனிமையான காதல் ஜோடியாக வலம் வந்து திருமணம் செய்து கொண்டு சீக்கிரத்திலேயே பிரிந்த ஜோடி நாகசைதன்யா - சமந்தா ஜோடி. பிரிந்த இந்த ஜோடியில் நாக சைதன்யா கடந்த வாரம் 'பொன்னியின் செல்வன்' நடிகை சோபிதா துலிபலாவைத் திருமணம் செய்து கொண்டார்.
அவர்களது திருமணத்திற்கு முன்பும், பின்பும் சில தத்துவமான பதிவுகளை தனது இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார் நாக சைதன்யாவின் முன்னாள் மனைவி சமந்தா. பிரிந்து போனாலும் அவர்களது காதல் நிச்சயம் ஞாபகப்படுத்திக் கொண்டுதான் இருக்கும். கல்யாணம் வரை வந்து பிரிந்து போன காதல் உண்மைக் காதலா, பொய்க் காதலா என்ற ஏக்கம் சமந்தாவிடம் இருக்கிறது.
நேற்று அவருடைய இன்ஸ்டா ஸ்டோரியில் அவரது வளர்ப்பு நாய் சாஷாவுடன் இருக்கும் சோகமான புகைப்படம் ஒன்றைப் பகிர்ந்து , “சாஷாவின் காதலைப் போல வேறு காதல் இல்லை,” எனப் பதிவிட்டுள்ளார்.
மனிதக் காதலை விட நாய்கள் வைக்கும் காதல்தான் உண்மையான காதல் என நினைக்கிறார் போலிருக்கிறது.