ரூ.50 கோடி வசூல் கிளப்பில் இணைந்த சர்வம் மாயா | கூட்ட நெரிசலால் கேன்சல் செய்யப்பட்ட ரேப்பர் வேடன் இசை நிகழ்ச்சி : ரயில் விபத்தில் பலியான ரசிகர் | 2025 தமிழ் சினிமா ஒரு ரீ-வைண்ட் | ஜன.3ல் 'பராசக்தி' பாடல் வெளியீட்டு விழா: அதிகாரப்பூர்வ அறிவிப்பு | புகையிலை விளம்பரத்திற்கு ரூ.40 கோடி: தைரியமாக மறுத்த சுனில் ஷெட்டி | ‛பருத்திவீரன்' புகழ் பாடகி லட்சுமி அம்மாள் காலமானார் | 2026லாவது அஜித் படம் வருமா | அண்ணா சாலை இரும்பு பாலத்திற்கு சிவாஜி பெயர் : ரசிகர்கள் வேண்டுகோள் | 2025ல் தமிழ் சினிமாவில் மறைந்த திரைப்பிரபலங்கள் | ஜனவரி 16ல் ஜூலிக்கு திருமணம்: பல வருட காதலரை மணக்கிறார் |

தெலுங்குத் திரையுலகத்தின் இனிமையான காதல் ஜோடியாக வலம் வந்து திருமணம் செய்து கொண்டு சீக்கிரத்திலேயே பிரிந்த ஜோடி நாகசைதன்யா - சமந்தா ஜோடி. பிரிந்த இந்த ஜோடியில் நாக சைதன்யா கடந்த வாரம் 'பொன்னியின் செல்வன்' நடிகை சோபிதா துலிபலாவைத் திருமணம் செய்து கொண்டார்.
அவர்களது திருமணத்திற்கு முன்பும், பின்பும் சில தத்துவமான பதிவுகளை தனது இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார் நாக சைதன்யாவின் முன்னாள் மனைவி சமந்தா. பிரிந்து போனாலும் அவர்களது காதல் நிச்சயம் ஞாபகப்படுத்திக் கொண்டுதான் இருக்கும். கல்யாணம் வரை வந்து பிரிந்து போன காதல் உண்மைக் காதலா, பொய்க் காதலா என்ற ஏக்கம் சமந்தாவிடம் இருக்கிறது.
நேற்று அவருடைய இன்ஸ்டா ஸ்டோரியில் அவரது வளர்ப்பு நாய் சாஷாவுடன் இருக்கும் சோகமான புகைப்படம் ஒன்றைப் பகிர்ந்து , “சாஷாவின் காதலைப் போல வேறு காதல் இல்லை,” எனப் பதிவிட்டுள்ளார்.
மனிதக் காதலை விட நாய்கள் வைக்கும் காதல்தான் உண்மையான காதல் என நினைக்கிறார் போலிருக்கிறது.




