32 வருடங்களுக்கு பிறகு மீண்டும் மலையாள படத்தில் நடிக்கும் மதுபாலா | எம்புரான் பட ரிலீசுக்கு முன்னதாக லூசிபர் முதல் பாகத்தை மீண்டும் ரிலீஸ் செய்ய திட்டம் | கேரள மாணவன் தற்கொலை : சமந்தாவின் இரங்கலும் கண்டனமும் | பறந்து போ : ரோட்டர் டேம் திரைப்பட விழாவிற்கு தேர்வு | இட்லி கடை : அருண் விஜய்யின் முதல் பார்வை வெளியானது | காதலியை மணந்தார் கிஷன் தாஸ் | மணிரத்னம், லோகேஷ் படத்தில் நடிக்க ஆசை : நாக சைதன்யா பேட்டி | பிளாஷ்பேக் : அன்றைக்கே 40 லட்சம் வசூலித்த 'மங்கம்மா சபதம்' | நடிகர் சங்க புதிய கட்டிடம் திறப்பது எப்போது? - நிர்வாகிகள் ஆலோசனை | புதிய பாடல்களை விமர்சிக்க வேண்டாம் : சித்ரா வேண்டுகோள் |
தெலுங்குத் திரையுலகத்தின் இனிமையான காதல் ஜோடியாக வலம் வந்து திருமணம் செய்து கொண்டு சீக்கிரத்திலேயே பிரிந்த ஜோடி நாகசைதன்யா - சமந்தா ஜோடி. பிரிந்த இந்த ஜோடியில் நாக சைதன்யா கடந்த வாரம் 'பொன்னியின் செல்வன்' நடிகை சோபிதா துலிபலாவைத் திருமணம் செய்து கொண்டார்.
அவர்களது திருமணத்திற்கு முன்பும், பின்பும் சில தத்துவமான பதிவுகளை தனது இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார் நாக சைதன்யாவின் முன்னாள் மனைவி சமந்தா. பிரிந்து போனாலும் அவர்களது காதல் நிச்சயம் ஞாபகப்படுத்திக் கொண்டுதான் இருக்கும். கல்யாணம் வரை வந்து பிரிந்து போன காதல் உண்மைக் காதலா, பொய்க் காதலா என்ற ஏக்கம் சமந்தாவிடம் இருக்கிறது.
நேற்று அவருடைய இன்ஸ்டா ஸ்டோரியில் அவரது வளர்ப்பு நாய் சாஷாவுடன் இருக்கும் சோகமான புகைப்படம் ஒன்றைப் பகிர்ந்து , “சாஷாவின் காதலைப் போல வேறு காதல் இல்லை,” எனப் பதிவிட்டுள்ளார்.
மனிதக் காதலை விட நாய்கள் வைக்கும் காதல்தான் உண்மையான காதல் என நினைக்கிறார் போலிருக்கிறது.