விக்ரமிற்கு ஜோடியாகும் ருக்மணி வசந்த் | கூலி படத்தில் வலிமையான கதாபாத்திரத்தில் நடிக்கிறேன் : ஸ்ருதிஹாசன் | கீரவாணிவுடன் கம்போசிங் பணியில் ராஜமவுலி | வார் 2 படத்திற்காக மீண்டும் சிக்ஸ்பேக்கிற்கு மாறிய ஜூனியர் என்டிஆர் | கூலி படத்தில் ரஜினிக்காக லோகேஷ் கனகராஜ் செய்த மாற்றம் | தலைவன் தலைவி, மாரீசன் படங்களின் முதல் நாள் வசூல் எவ்வளவு? | மணிகண்டனை இயக்குனர் தியாகராஜன் குமார ராஜா | கருப்பு படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய முயற்சி பண்றோம் : ஆர்.ஜே. பாலாஜி | பிரசாந்த் படத்தில் அறிமுகமாகும் பிரபலங்களின் வாரிசுகள் | திருமணம் செய்யாமலேயே கர்ப்பம் ஆன பாவனா |
தெலுங்குத் திரையுலகத்தின் சீனியர் நடிகர் மோகன் பாபு. நடிகர் ரஜினிகாந்த்தின் நீண்ட கால நெருங்கிய நண்பர். மோகன் பாபுவுக்கு லட்சுமி, விஷ்ணு, மனோஜ் என ஒரு மகள், இரண்டு மகன்கள் உள்ளனர். மூவருமே தெலுங்குப் படங்களில் நடித்து வருகிறார்கள்.
கடந்த சில வருடங்களாக மோகன் பாபு குடும்பத்தில் சொத்து தகராறு நடந்து வருவதாகத் தகவல். திருப்பதியில் பள்ளி, கல்லூரி ஆகியவற்றை நடத்தி வருகிறார் மோகன் பாபு. அது மட்டுமல்லாமல் திருப்பதி, ஐதராபாத் ஆகிய இடங்களில் பல கோடி மதிப்புள்ள சொத்துக்கள் இருக்கிறது.
நேற்று காலை மனோஜ் அவரது அப்பா மீது புகார் தெரிவித்ததாக பரபரப்பு ஏற்பட்டது. அது மட்டுமல்லாமல் மருத்துவமனைக்குச் சென்று தனக்கு ஏற்பட்ட காயத்திற்கு மனோஜ் சிகிச்சை மேற்கொண்டார். மகன் மீது மோகன் பாபுவும் புகார் அளித்தார் என்றும் தெரிகிறது. ஆனால், இது தவறான செய்தி என மோகன் பாபு குடும்பம் சார்பாக வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்கள்.
கடந்த வருடம் மனோஜும், அவரது அண்ணன் விஷ்ணுவும் சண்டை போட்டுக் கொண்டதாகவும் தகவல் வெளியானது. புமா மவுனிகா என்ற பெண்ணை மனோஜ் இரண்டாவது திருமணம் செய்து கொண்டது அவரது குடும்பத்தினருக்குப் பிடிக்கவில்லை. அதிலிருந்தே மனோஜுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் இடையே சண்டை நிலவி வருவதாக டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.