மருமகனுக்காக படம் தயாரிக்கும் விஜய் ஆண்டனி | ரஜினியே ரத்தத்தை நம்பி தான் படம் எடுக்கிறார் : ராதாரவி பேச்சு | இந்து தர்மத்தை சினிமாவில் சொல்வதை நினைத்து பெருமைப்படுகிறேன் : ‛ஹனுமன்' ஹீரோ | பார்வையாளர்களின் பதிலை மட்டுமே மதிக்கிறேன் : பல்லவி ஜோஷி | 100 மில்லியன் கடந்த 'முத்த மழை' மேடைப் பாடல் | 'மிராய்' டிரைலரைப் பார்த்து வாழ்த்திய ரஜினிகாந்த் | அல்லு அர்ஜுன், பவன் கல்யாண் 'மனஸ்தாபம்' முடிவுக்கு வந்ததா ? | 'கைதி 2' படத்திற்கு இசை அனிருத்? | சமூக வலைத்தள கொள்ளையர்கள் : IFTPC காட்டம் | பூஜா ஹெக்டேவுக்கு என்னதான் ஆச்சு ? |
டாக்டர் எம்.ஜி.ஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவன நிகர்நிலை பல்கலைகழத்தின் 38வது பட்டமளிப்பு விழா நேற்று நடந்தது. இதில் 4 ஆயிரம் மாணவ மாணவிகளுக்கு பட்டம் வழங்கப்பட்டது. விழாவுக்கு பல்கலைகழக நிறுவன வேந்தர் ஏ.சி.சண்முகம் தலைமை தாங்கினார். பல்கலைகழக சேர்மன் ஏ.சி.எஸ்.அருண்குமார் முன்னிலை வகித்தார். செகரட்டரி ஏ.ரவிகுமார், துணை வேந்தர் எஸ்.கீதாலட்சுமி முன்னிலை வகித்தனர்.
மத்திய அமைச்சர் எல்.முருகன் மாணவ மாணவிகளுக்கு பட்டம் வழங்கி சிறப்புரையாற்றினார். இந்த விழாவில் விஞ்ஞானியும், இந்திய ராணுவ ஆராய்ச்சி நிறுவன தலைவருமான ஜி.ஏ.சீனிவாச மூர்த்தி, நடிகர் அர்ஜுன், இயக்குனர் பி.வாசு ஆகியோருக்கு அவர்களது சேவையை பாராட்டி கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.