‛ஹிருதயபூர்வம்' படத்தில் கெஸ்ட் ரோலில் மீரா ஜாஸ்மின் ; சென்சார் மூலம் உடைந்த ரகசியம் | வேண்டுமென்றே போலீஸ் ஜீப்பில் ஏற்றினார்கள் ; சுரேஷ்கோபி மகன் திடுக் தகவல் | மலையாளத்தில் சாண்டி நடிகராக அறிமுகமாகும் முதல் படம் ஆக.,28ல் ரிலீஸ் | தயாரிப்பாளர் மட்டுமல்ல, இயக்குனரும் ஆனார் ரவிமோகன் | கஞ்சா கடத்தும் காட்டீஸ் : சீலாவதியாக நடிக்கும் அனுஷ்கா | அடுத்த படம் எது? அல்லாடும் டாப் ஹீரோக்கள் | டைட்டில் இல்லாமலேயே முடிந்த விமல் படம் | யானை நடிக்கும் புதிய படம் ‛அழகர் யானை' | ஏஐ தொழில்நுட்பம் சினிமா கலைஞர்களை அழித்துவிடும்: அனுராக் காஷ்யப் எச்சரிக்கை | தயாரிப்பு நிறுவனம் துவக்கம்: திருப்பதியில் கெனிஷாவுடன் ரவிமோகன் சாமி தரிசனம் |
அட்லி இயக்கத்தில், அல்லு அர்ஜுன், தீபிகா படுகோனே மற்றும் பலர் நடிக்கும் படம் தற்போது உருவாகிக் கொண்டிருக்கிறது. அல்லு அர்ஜுனின் 22வது படாகவும், அட்லியின் 6வது படமாகவும் உருவாகும் இந்தப் படத்தில் 'பகிரக்கூடாத ஒப்பந்தம்' ஒன்று அனைவரிடமும் போடப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
படம் முடியும் வரை படம் குவித்த எந்த ஒரு தகவலையும் யாரும் வெளியில் சொல்லக் கூடாது என்பதுதான் அந்த ஒப்பந்தம். ஆங்கிலத்தில், 'Non Disclosure Agreement'. இதை 'ரகசிய ஒப்பந்தம்' என்றும் கூட சொல்லலாம். அதாவது படத்தின் ரகசியம் எதையும் வெளியில் சொல்லக் கூடாது.
சுமார் 800 கோடி ரூபாய் செலவில் இப்படம் தயாராகி வருவதாக சொல்லப்படுகிறது. படத்தில் ஹாலிவுட் தொழில்நுட்பக் கலைஞர்களும் பணியாற்ற உள்ளார்கள். கடந்த மூன்று வாரங்களாக இப்படத்தின் படப்பிடிப்பு தொழிலாளர்கள் ஸ்டிரைக்கால் தடைபட்டிருந்தது. தற்போது மீண்டும் ஆரம்பமாகி உள்ளது.
ஹாலிவுட் கலைஞர்களும் படத்தில் பணியாற்ற உள்ளதால் எந்த விதத்திலும் படத்திற்கு சிக்கல் வராத அளவிற்கு படப்பிடிப்பை திட்டமிட்டுள்ளார்களாம்.