‛ஹிருதயபூர்வம்' படத்தில் கெஸ்ட் ரோலில் மீரா ஜாஸ்மின் ; சென்சார் மூலம் உடைந்த ரகசியம் | வேண்டுமென்றே போலீஸ் ஜீப்பில் ஏற்றினார்கள் ; சுரேஷ்கோபி மகன் திடுக் தகவல் | மலையாளத்தில் சாண்டி நடிகராக அறிமுகமாகும் முதல் படம் ஆக.,28ல் ரிலீஸ் | தயாரிப்பாளர் மட்டுமல்ல, இயக்குனரும் ஆனார் ரவிமோகன் | கஞ்சா கடத்தும் காட்டீஸ் : சீலாவதியாக நடிக்கும் அனுஷ்கா | அடுத்த படம் எது? அல்லாடும் டாப் ஹீரோக்கள் | டைட்டில் இல்லாமலேயே முடிந்த விமல் படம் | யானை நடிக்கும் புதிய படம் ‛அழகர் யானை' | ஏஐ தொழில்நுட்பம் சினிமா கலைஞர்களை அழித்துவிடும்: அனுராக் காஷ்யப் எச்சரிக்கை | தயாரிப்பு நிறுவனம் துவக்கம்: திருப்பதியில் கெனிஷாவுடன் ரவிமோகன் சாமி தரிசனம் |
1952ம் ஆண்டு வெளிவந்த படம் 'மாப்பிள்ளை'. டி. ஆர். ரகுநாத் இயக்கினார். டி.ஆர்.ராமச்சந்திரன், பி.வி. நரசிம்ம பாரதி, வி.கே.ராமசாமி, பி.கே. சரஸ்வதி, டி.கே.ராமச்சந்திரன், பி.எஸ். வீரப்பா, எம்.என்.ராஜம், எம்.லட்சுமிபிரபா, வி.கே.ராமசாமி, கே.ஏ.தங்கவேலு, எம்.சரோஜா, எம்.எஸ்.எஸ்.பாக்யம், கே.லட்சுமிகாந்தம், ராகினி, காக்கா ராதாகிருஷ்ணன், சி.எஸ்.பாண்டியன், ஆர்.பாலசுப்ரமணியம் மற்றும் டி.கே. புஷ்பவல்லி ஆகியோர் நடித்தனர்.
ஒரு அச்சகத்தில் அலுவலகப் பையனாக வேலைப் பார்க்கும் ஏழை (டி. ஆர். ராமச்சந்திரன்) திடீர் பணக்காரனாக மாறுகிறான். அவன் வேலைபார்த்த அச்சக முதலாளியின் மகன் (டி.கே.ராமச்சந்திரன்) புதுப்பணக்காரனை அழித்து அவனது சொத்துக்களை அபகரிக்க சபதம் செய்கிறான். அது நடந்ததா இல்லையா என்பதே கதை.
இந்த படம் வெளியானபோது படத்திற்கு போதிய வரவேற்பு கிடைக்கவில்லை. இதனால் படத்தை தயாரித்த நேஷனல் பிக்சர்ஸ் நிறுவனம் ஒரு புதுமையை செய்தது. அப்போது ஒரு சர்க்கசின் சாகச நிகழ்ச்சிகள் வண்ணக்கலரில் படமாக்கபபட்டு குறும்படமாக வந்திருந்தது. அந்த படத்தின் உரிமத்தை வாங்கி 'மாப்பிள்ளை' படத்தின் இடையே அதை சேர்த்து, அதையே விளம்பரமாக்கி படத்தை வெளியிட்டது. மக்கள் அந்த சர்க்கஸ் காட்சிகளை காண்பதற்காகவே தியேட்டருக்கு படை எடுத்தனர் படமும் வெற்றி பெற்றது.