நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவம் பொல்லாதது-க்கு பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

1952ம் ஆண்டு வெளிவந்த படம் 'மாப்பிள்ளை'. டி. ஆர். ரகுநாத் இயக்கினார். டி.ஆர்.ராமச்சந்திரன், பி.வி. நரசிம்ம பாரதி, வி.கே.ராமசாமி, பி.கே. சரஸ்வதி, டி.கே.ராமச்சந்திரன், பி.எஸ். வீரப்பா, எம்.என்.ராஜம், எம்.லட்சுமிபிரபா, வி.கே.ராமசாமி, கே.ஏ.தங்கவேலு, எம்.சரோஜா, எம்.எஸ்.எஸ்.பாக்யம், கே.லட்சுமிகாந்தம், ராகினி, காக்கா ராதாகிருஷ்ணன், சி.எஸ்.பாண்டியன், ஆர்.பாலசுப்ரமணியம் மற்றும் டி.கே. புஷ்பவல்லி ஆகியோர் நடித்தனர்.
ஒரு அச்சகத்தில் அலுவலகப் பையனாக வேலைப் பார்க்கும் ஏழை (டி. ஆர். ராமச்சந்திரன்) திடீர் பணக்காரனாக மாறுகிறான். அவன் வேலைபார்த்த அச்சக முதலாளியின் மகன் (டி.கே.ராமச்சந்திரன்) புதுப்பணக்காரனை அழித்து அவனது சொத்துக்களை அபகரிக்க சபதம் செய்கிறான். அது நடந்ததா இல்லையா என்பதே கதை.
இந்த படம் வெளியானபோது படத்திற்கு போதிய வரவேற்பு கிடைக்கவில்லை. இதனால் படத்தை தயாரித்த நேஷனல் பிக்சர்ஸ் நிறுவனம் ஒரு புதுமையை செய்தது. அப்போது ஒரு சர்க்கசின் சாகச நிகழ்ச்சிகள் வண்ணக்கலரில் படமாக்கபபட்டு குறும்படமாக வந்திருந்தது. அந்த படத்தின் உரிமத்தை வாங்கி 'மாப்பிள்ளை' படத்தின் இடையே அதை சேர்த்து, அதையே விளம்பரமாக்கி படத்தை வெளியிட்டது. மக்கள் அந்த சர்க்கஸ் காட்சிகளை காண்பதற்காகவே தியேட்டருக்கு படை எடுத்தனர் படமும் வெற்றி பெற்றது.