எண்பதுகளின் கதாநாயகியை நினைவூட்டும் அனுபமா; நடிகை கோமலி பிரசாத் பாராட்டு | 'லோகா 2' மற்றும் 'பிரேமலு 2'வில் நான் இருக்கிறேனா ? மமிதா பைஜூ பதில் | வயலில் நாற்று நட நெல்லை மக்கள் தந்த பயிற்சி: அனுபமா பரமேஸ்வரனின் 'பைசன்' அனுபவம் | உழைக்கும் கரங்கள், எஜமான், கண்ணப்பா - ஞாயிறு திரைப்படங்கள் | பிளாஷ்பேக்: வெள்ளிவிழா ஆண்டின் நிறைவில் விண்வெளி நாயகன் கமல்ஹாசனின் “தெனாலி” | நடிகைகளை இதற்கு மட்டுமே பயன்படுத்துகிறார்கள் : ராதிகா ஆப்தே ஆதங்கம் | சென்சாரில் சிக்கிய பல்டி பட ஹீரோவின் படம் : உயர்நீதிமன்ற நீதிபதிக்காக தனிக்காட்சி திரையீடு | நிபந்தனையுடன் துல்கர் சல்மானின் லேண்ட்ரோவர் கார் திரும்ப ஒப்படைப்பு | கூகுள் கிளவுட் உடன் இணைந்த ஏஆர் ரஹ்மான் | எனக்கு பிடித்தமான ஹீரோ நானி : ருக்குமணி வசந்த் |
பிரசாந்த் ராமன் இயக்க லிங்கா, சரத் ரவி நடிக்கும் தாவுத் படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார் ராதாரவி. அவர் பேசுகையில், ‛‛கால் மூட்டு ஆபரேஷன் காரணமாக நடக்க முடியாமல் அவதிப்பட்டேன். 2 ஆண்டுகள் பெட்டில் இருந்து இப்போது மீண்டு விட்டேன். சினிமாக்காரன் கால் ஆட்டிக் கொண்டே தூங்க வேண்டும். இல்லை என்றால் அவரை காணவில்லை என்பார்கள். ஒரு காலத்தில் வில்லன் என்றால், குடும்பத்தை கெடுக்க வேண்டும் என்றால் என்னை கூப்பிடுவார்கள். இப்போது மாறிவிட்டேன். நேரடியாக வில்லத்தனம் செய்வதில்லை. ஆர்டர் போடுகிற இடத்தில் இருக்கிறேன். இந்த படத்தில் முழுக்க முழுக்க ஆங்கிலத்தில் ஒரு பாடல் வருகிறது. ஆங்கிலத்தில் தலைப்பு தான் வைத்தார்கள். இப்போது பாடலே வருகிறது. தமிழை கொன்று விடாதீர்கள். இப்போது தியேட்டரில் கூட்டம் குறைவாக இருக்கிறது. ரஜினிகாந்தே ரத்தத்தை நம்பி படம் எடுக்கிறார். நாம எல்லாம் சாதாரணமான ஆள். ஆரம்பம் முதலே ரத்தத்தை காண்பிக்கலாம். நிறைய படங்கள் வந்தாலும் அதெல்லாம் தியேட்டரில் ஓட வேண்டும். ஒடிடியில் பார்க்கலாம் என மக்கள் இருந்து விடக்கூடாது. தியேட்டருக்கு வந்து படத்தை பாருங்க'' என்றார்.