ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி | குருநாதருக்கு நன்றி செலுத்தும் மிஷ்கின் | அடுத்த ஆண்டாவது ஒலிக்குமா என் இனிய தமிழ் மக்களே | கூலி படத்துக்கு விமர்சனம் : மவுனம் கலைத்த லோகேஷ் கனகராஜ் | தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை |

பிரசாந்த் ராமன் இயக்க லிங்கா, சரத் ரவி நடிக்கும் தாவுத் படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார் ராதாரவி. அவர் பேசுகையில், ‛‛கால் மூட்டு ஆபரேஷன் காரணமாக நடக்க முடியாமல் அவதிப்பட்டேன். 2 ஆண்டுகள் பெட்டில் இருந்து இப்போது மீண்டு விட்டேன். சினிமாக்காரன் கால் ஆட்டிக் கொண்டே தூங்க வேண்டும். இல்லை என்றால் அவரை காணவில்லை என்பார்கள். ஒரு காலத்தில் வில்லன் என்றால், குடும்பத்தை கெடுக்க வேண்டும் என்றால் என்னை கூப்பிடுவார்கள். இப்போது மாறிவிட்டேன். நேரடியாக வில்லத்தனம் செய்வதில்லை. ஆர்டர் போடுகிற இடத்தில் இருக்கிறேன். இந்த படத்தில் முழுக்க முழுக்க ஆங்கிலத்தில் ஒரு பாடல் வருகிறது. ஆங்கிலத்தில் தலைப்பு தான் வைத்தார்கள். இப்போது பாடலே வருகிறது. தமிழை கொன்று விடாதீர்கள். இப்போது தியேட்டரில் கூட்டம் குறைவாக இருக்கிறது. ரஜினிகாந்தே ரத்தத்தை நம்பி படம் எடுக்கிறார். நாம எல்லாம் சாதாரணமான ஆள். ஆரம்பம் முதலே ரத்தத்தை காண்பிக்கலாம். நிறைய படங்கள் வந்தாலும் அதெல்லாம் தியேட்டரில் ஓட வேண்டும். ஒடிடியில் பார்க்கலாம் என மக்கள் இருந்து விடக்கூடாது. தியேட்டருக்கு வந்து படத்தை பாருங்க'' என்றார்.