மூணு குழந்தைகள் பெத்துக்கணும்... ஜான்வி கூறும் காரணம் | இரண்டாவது வாய்ப்பில் வெற்றி பெறுவாரா ருக்மிணி வசந்த்? | ‛கட்டா குஸ்தி 2' படம் துவங்கியது | சுதீப்பின் அடுத்த படத் தலைப்பு 'மார்க்' | தெலுங்கில் 100 கோடி வியாபாரத்தில் 'காந்தாரா சாப்டர் 1' | ரசிகர்களின் எதிர்பார்ப்புக்காக மட்டுமே படம் எடுக்க மாட்டேன் : லோகேஷ் கனகராஜ் | நல்ல கதாபாத்திரம் கிடைப்பதுதான் ஒரு நடிகைக்கு அங்கீகாரம்: மிர்னா மேனன் | பிளாஷ்பேக்: ரஜினி படத்தை தயாரித்து, இயக்கிய கன்னட நடிகர் | பிளாஷ்பேக்: ஹாலிவுட் ரீமேக்கில் நடிக்க மறுத்த பானுமதி | நடப்பு தயாரிப்பாளர் சங்க தேர்தல் : அனைத்து நிர்வாகிகளும் போட்டியின்றி தேர்வு |
பிரசாந்த் ராமன் இயக்க லிங்கா, சரத் ரவி நடிக்கும் தாவுத் படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார் ராதாரவி. அவர் பேசுகையில், ‛‛கால் மூட்டு ஆபரேஷன் காரணமாக நடக்க முடியாமல் அவதிப்பட்டேன். 2 ஆண்டுகள் பெட்டில் இருந்து இப்போது மீண்டு விட்டேன். சினிமாக்காரன் கால் ஆட்டிக் கொண்டே தூங்க வேண்டும். இல்லை என்றால் அவரை காணவில்லை என்பார்கள். ஒரு காலத்தில் வில்லன் என்றால், குடும்பத்தை கெடுக்க வேண்டும் என்றால் என்னை கூப்பிடுவார்கள். இப்போது மாறிவிட்டேன். நேரடியாக வில்லத்தனம் செய்வதில்லை. ஆர்டர் போடுகிற இடத்தில் இருக்கிறேன். இந்த படத்தில் முழுக்க முழுக்க ஆங்கிலத்தில் ஒரு பாடல் வருகிறது. ஆங்கிலத்தில் தலைப்பு தான் வைத்தார்கள். இப்போது பாடலே வருகிறது. தமிழை கொன்று விடாதீர்கள். இப்போது தியேட்டரில் கூட்டம் குறைவாக இருக்கிறது. ரஜினிகாந்தே ரத்தத்தை நம்பி படம் எடுக்கிறார். நாம எல்லாம் சாதாரணமான ஆள். ஆரம்பம் முதலே ரத்தத்தை காண்பிக்கலாம். நிறைய படங்கள் வந்தாலும் அதெல்லாம் தியேட்டரில் ஓட வேண்டும். ஒடிடியில் பார்க்கலாம் என மக்கள் இருந்து விடக்கூடாது. தியேட்டருக்கு வந்து படத்தை பாருங்க'' என்றார்.