25வது நாளில் அடியெடுத்து வைத்த 'டூரிஸ்ட் பேமிலி' | ஹீரோக்களின் உதவியாளர்கள் கதை கேட்பதை முதலில் நிறுத்த வேண்டும் ; ஆர்கே செல்வமணி காட்டம் | தெலுங்கு படத்தில் சூப்பர் ஸ்டார் கதாபாத்திரத்தில் நடிக்கும் உபேந்திரா | எனக்குள் புதிய விடியலை திறந்து விட்ட ஓஷோவின் பேச்சு ; மோகன்லால் | என் விளக்கத்தை அக்ஷய் குமார் படித்தால் பிரச்னை முடிவுக்கு வந்துவிடும் ; படத்திலிருந்து விலகிய நடிகர் பதில் | 'அஞ்சலி' படம் பார்த்து அழுத சிலம்பரசன் | பிரபாஸ் அமைதியானவர் அல்ல, கலகலப்பானவர்! -மாளவிகா மோகனன் | உருவ கேலி செய்தவர்களுக்கு ஐஸ்வர்யா ராய் கொடுத்த பதிலடி! | திரைப்படங்களை திருட்டுப் பதிவிறக்கம் செய்யாதீர்கள்! - நடிகர் சூரி வேண்டுகோள் | மந்தமான வசூலில் விஜய் சேதுபதியின் ‛ஏஸ்' |
பைக் ரேஸ் பிரியரான டிடிஎப் வாசன் தனது எனது யூடியூப் சேனல் மூலமாக லட்சக்கணக்கான ரசிகர்களை பெற்றவர். அதேசமயம் சாலைகளில் விபத்தில் சிக்கி கைது செய்யப்படும் அளவிற்கு சர்ச்சைகளிலும் சிக்கி இன்னும் பரபரப்பை ஏற்படுத்தினார். இந்த நிலையில் மஞ்சள் வீரன் என்கிற படத்தின் மூலமாக சினிமாவிலும் கதாநாயகனாக டிடிஎப் வாசன் அறிமுகம் ஆகிறார் என்கிற அறிவிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியானது. ஆனால் சில காரணங்களால் இந்த படத்தில் இருந்து டிடிஎப் வாசன் நீக்கப்படுகிறார் என படத்தின் இயக்குனர் செல்அம் என்பவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு அறிவிப்பை வெளியிட்டார். மேலும் படத்திற்கான புதிய கதாநாயகன் தேர்வு நடைபெறுகிறது என்றும் கூறியிருந்தார்.
இந்த நிலையில் நகைச்சுவை நடிகர் கூல் சுரேஷ் தற்போது இந்த படத்தில் நடிப்பதன் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிறார். இந்த தகவலை இயக்குனர், கூல் சுரேஷ் இருவருமே உறுதி செய்துள்ளனர். நடிகர் கூல் சுரேஷ், சிம்பு மற்றும் சந்தானம் ஆகியோர் படங்களில் தொடர்ந்து இடம் பிடித்து வருபவர். ஆனால் அதைவிட ஒவ்வொரு பெரிய நட்சத்திரங்களின் படங்கள் வெளியாகும் போதும் தியேட்டர்களில் முதல் நாள் முதல் காட்சியை பார்த்துவிட்டு வித்தியாசமான பாணியில் கருத்துக்களை சொல்வது என எப்போதும் தன்னை பரபரப்பிலேயே வைத்திருப்பவர் தான் கூல் சுரேஷ். நகைச்சுவை நடிகரான அவருக்கு டிடிஎப் வாசன் விலகியது கதாநாயகனுக்காக வாசலை திறந்து விட்டுள்ளது என்றே சொல்லலாம்.