7ஜி ரெயின்போ காலனி 2 அப்டேட் சொன்ன செல்வராகவன் | ராஷ்மிகாவின் 'தி கேர்ள் பிரண்ட்' படத்தின் சென்சார் மற்றும் ரன்னிங் டைம் வெளியானது! | விருது மாற்றி கிடைத்ததில் கொஞ்சம் வருத்தம் தான் : மஞ்சும்மல் பாய்ஸ் இசையமைப்பாளர் | நிகழ்ச்சிக்கு தாமதமாக வந்த மாதுரி தீக்ஷித் : கோபத்தில் வெளியேறிய ரசிகர்கள் | கேரள அரசு குழந்தை நட்சத்திர விருதுகள் மிஸ்ஸிங் : கிளம்பியது சர்ச்சை | ஆர்யன் பட கிளைமாக்ஸ் மாற்றம் : ஹீரோ விஷ்ணு விஷால் அறிவிப்பு | சாய் அபயங்கரை வாழ்த்திய அல்லு அர்ஜுன்! | வேகம் எடுக்கும் விஜய்யின் 'ஜனநாயகன்' படக்குழு! இம்மாதம் முதல் பாடல் வெளியாகிறது! | அஜித் 64வது படத்தில் நடிக்க விஜய்சேதுபதி, லாரன்ஸிடம் பேச்சுவார்த்தை! | டிரெயின் பட ரிலீசில் அதிரடி முடிவு எடுத்த தாணு |

பிரபல யு டியூப்பர் வாசன். பைக் ரைடில் சாகசம் செய்து அதை யு டியூபில் பதிவேற்றம் செய்து அதன் மூலம் புகழ்பெற்றவர். தற்போது 'மஞ்சள் வீரன்' என்ற படத்தில் நடித்து வருகிறார். கடந்த மாதம் சென்னை - வேலூர் சாலையில் வீலிங் செய்தபோது விபத்து ஏற்பட்டது. இதில் அவரின் கை எலும்பு முறிந்தது. போக்குவரத்து விதிகளை மீறியதாக அவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதை தொடர்ந்து கைது செய்யப்பட்ட அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் அவர் நேற்று நிபந்தனை ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.
விடுதலையான வாசன் சிறை வாசலில் நிருபர்களிடம் கூறியதாவது: 10 ஆண்டுகளுக்கு ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்பட்டது என்னை திருத்துவதற்காக அல்ல. என் வாழ்க்கையை அழிப்பதற்காக செய்த மாதிரி இருக்கிறது. எனது கை முறிந்தது பற்றி கூட நான் கவலைப்படவில்லை. ஆனால் ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்பட்டதை அறிந்தபோது அழுதேன்.  ஆனால் நான் கட்டாயம் பைக் ஓட்டுவேன். 
எனது ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து வழக்கு தொடர்வேன். சர்வதேச ஓட்டுனர் உரிமம் பெற்று மீண்டும் வாகனம் ஓட்டுவேன். திரைப்படங்களிலும் தொடர்ந்து நடிப்பேன். என்னை பார்த்து குழந்தைகள், சிறுவர்கள் கெட்டுப்போகிறார்கள் என்கிற குற்றச்சாட்டை நான் ஏற்க மாட்டேன். வித்தியாசமாக எதை பார்த்தாலும் அவர்கள் ஈர்க்கப்படுவது இயற்கையே. பெற்றோர்கள்தான் அவர்களுக்கு புரிய வைக்க வேண்டும்.
நான் என்ன கிரிமினல் குற்றவாளியா? எதற்காக என்னுடைய பாஸ்போர்ட் பறிமுதல் செய்யப்பட்டது என்று தெரியவில்லை. இதுவரை நான் நேபாளம் மட்டுமே சென்றுள்ளேன். உலகம் முழுக்க செல்ல வேண்டும் என்பது என் கனவு. 
இவ்வாறு அவர் கூறினார்.