26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் | யு டியுப் சேனல்கள், சமூக வலைத்தளங்கள் இளையராஜா புகைப்படங்களை பயன்படுத்த இடைக்கால தடை | கஞ்சா வழக்கு : சிம்பு பட தயாரிப்பாளர் கைது | ராஜமவுலியின் கடவுள் மறுப்புப் பேச்சு : அதிகரிக்கும் சர்ச்சை | கதை என்னவென்று தெரியாமல் தான் எம்புரான் பட சென்சார் பிரச்னையில் உதவினேன் : சுரேஷ்கோபி | தி கேர்ள் ப்ரண்ட் ஹீரோவின் கன்னட பட ரிலீஸ் தேதி ஒரு வாரம் தள்ளி வைப்பு |

தெலுங்குத் திரையுலகத்தின் முன்னணி ஆக்ஷன் ஹீரோக்களில் ஒருவராக இருப்பவர் ஜுனியர் என்டிஆர். ஆனால், ராஜமவுலி இயக்கத்தில் 'ஆர்ஆர்ஆர்' படத்தில் நடித்த பின் அவர் உலக அளவில் புகழ் பெற்றுவிட்டார். அப்படத்தில் இடம் பெற்ற 'நாட்டு நாட்டு' பாடல் ஆஸ்கர் விருதை வென்றதும் அதற்கு ஒரு காரணம். அப்படத்திற்குப் பிறகு அவர் பான் இந்தியா நடிகராக உயர்ந்துவிட்டார்.
'ஆர்ஆர்ஆர்' படத்தில் ராம் சரணும் மற்றொரு கதாநாயகனாக நடித்திருந்தார். அப்படத்திற்குப் பின் அவர்கள் இருவரும் தனி கதாநாயகர்களாக நடித்துள்ள படங்கள் அடுத்தடுத்து வர உள்ளன. ராம் சரண் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகும் 'கேம் சேஞ்சர்' படம் இந்த ஆண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜுனியர் என்டிஆர் தனி கதாநாயகனாக நடித்துள்ள 'தேவரா' படத்தின் முதல் பாகம் இந்த வாரம் செப்டம்பர் 27ம் தேதி வெளியாக உள்ளது. இப்படம் அவரது தனி படங்களிலேயே அதிக விலைக்கு விற்கப்பட்டுள்ள படமாக சாதனை புரிந்துள்ளது. தெலுங்கு மாநிலங்களான ஆந்திரா, தெலங்கானா தியேட்டர் உரிமை மட்டும் 110 கோடிக்கு விற்கப்பட்டுள்ளதாகத் தகவல். மற்ற மாநிலங்கள், வெளிநாடுகள் சேர்த்து ஒட்டு மொத்தமாக 180 கோடி வரை வியபாரம் நடைபெற்றுள்ளதாம்.
இப்படம் தென் மாநிலங்களில் மட்டுமல்லாது வட மாநிலங்களிலும் வெற்றி பெற்றால் தெலுங்கு நடிகரான பிரபாஸுக்குப் பிறகு பான் இந்தியா நடிகராக தனி அடையாளத்துடன் உயர்வார் ஜுனியர் என்டிஆர்.




