இயக்குனர் ரஞ்சித் மீதான மற்றொரு பாலியல் வழக்கும் தள்ளுபடி | திலீப் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | 'பைசன்' வரவேற்பு: அனுபமா பரமேஸ்வரன் நீண்ட நன்றிப் பதிவு | திரைப்படத் தொழிலாளர்களுக்கும் பங்கு: தெலுங்கானா முதல்வர் அறிவிப்பு | காந்தாரா சாப்டர் 1 : ஆன்லைன் இணையதளத்தில் 14 மில்லியன் டிக்கெட்டுகள் விற்பனை | மீண்டும் மகன் படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்கும் மோகன்லால் ? | கேஜிஎப் ஒளிப்பதிவாளர் திருமணத்தில் கலந்து கொண்ட ஸ்ரீ லீலா | டிவி நிகழ்ச்சியில் சவுந்தர்யாவை நினைத்து கண் கலங்கிய ரம்யா கிருஷ்ணன் | மீண்டும் பாலகிருஷ்ணா ஜோடியாக நயன்தாரா நடிப்பது ஏன் | ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனருக்கு பிஎம்டபுள்யூ கார் பரிசு |

'மஹா சிவராத்திரி' இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இரவு முழுவதும் கண் விழித்து சிவபெருமானை வழிபடுவார்கள். அந்தக் காலத்தில் எல்லாம் டூரிங் டாக்கீஸ்கள் இருந்தபோது ஒரே டிக்கெட்டில் விடிய விடிய மூன்று படங்களைக் காட்டுவார்கள். காலப் போக்கில் அவை போய்விட்டன.
தெலுங்கானா தலைநகரான ஹைதராபாத்தில் இன்று இரவு மகேஷ்பாபு நடித்த 'குண்டூர் காரம்', ஜுனியர் என்டிஆர் நடித்த 'தேவரா' ஆகிய படங்களை இரவு நேரக் காட்சியாக நடத்தத் திட்டமிட்டிருந்தார்கள். ஆனால், அந்தக் காட்சிகளுக்கு தெலுங்கானா அரசு அனுமதி அளிக்கவில்லை.
கடந்த வருடம் 'புஷ்பா 2' படத்தின் பிரிமியர் காட்சியின் போது நடைபெற்ற நெரிசலில் பெண் ஒருவர் மரணம் அடைந்தார். அதனால், அங்கு அனைத்துவிதமான சிறப்புக் காட்சிகளுக்கும் நீதிமன்றம் தடை விதித்தது. எனவே தான் இன்றைய சிறப்புக் காட்சிகளுக்கு அனுமதி வழங்கப்படவில்லை எனத் தெரிகிறது.
இன்றைய சிறப்புக் காட்சிகள் ரத்து செய்யப்பட்டதால் மகேஷ்பாபு ரசிகர்களும், ஜுனியர் என்டிஆர் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.