என்னை ஏன் டார்கெட் செய்கிறார்கள் : கயாடு லோஹர் வேதனை | பெரிய சம்பளத்தை மட்டுமே எதிர்பார்த்து நான் நடிப்பதில்லை : தீபிகா படுகோனே விளக்கம் | ரன்வீர், சாரா நடித்துள்ள துரந்தர் பட டிரைலர் வெளியானது | ரஜினி படத்திலிருந்து விலகியதால் மீண்டும் கார்த்தியுடன் இணையும் சுந்தர்.சி | பாலகிருஷ்ணா 111வது படத்தில் ராணி ஆக நயன்தாரா | எம்புரான் விமர்சனம் : பிரித்விராஜ் கருத்து | மீண்டும் காமெடி ஹீரோவான சதீஷ் | ஒரே படத்தின் மூலம் தமிழுக்கு வரும் தெலுங்கு, மலையாள ஹீரோயின்கள் | டேனியல் பாலாஜியின் கடைசி படம்: 28ம் தேதி வெளியாகிறது | பிளாஷ்பேக்: சோகத்தில் வென்ற ரஜினிகாந்தும், தோற்ற விஜயகாந்தும் |

சூர்யா நடித்த 'ரெட்ரோ' கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெளியானது. இதன் புரமோஷன் நிகழ்ச்சிகளை பெரிய அளவில் நடத்தினார் சூர்யா. அந்த வகையில் கடந்த ஏப்ரல் 26ம் தேதி ஐதராபாத்தில் நடந்த விழாவில் விஜய்தேவரகொண்டா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். நிகழ்வில் அவர் பேசும்போது பழங்குடியின மக்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகள் தெரிவித்திருந்தார்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதை தொடர்ந்து தெலுங்கானா பழங்குடி இன வழக்கறிஞர்கள் சங்க தலைவர் கிஷன் ராஜ் சவுகான், விஜய் தேவரகொண்டா மீது ஐதராபாத் எஸ்.ஆர்.நகர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
இதேபோன்று மாநில பழங்குடியின மக்கள் கூட்டு நடவடிக்கை குழு தலைவர் நெனாவத் அசோக்குமார், சைபராபாத் ராய்துர்கம் காவல் நிலையத்தில் புகார் மனு கொடுத்தார். இந்த புகாரின் அடிப்படையில் விஜய் தேவரகொண்டா மீது பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமை சட்டத்தின் கீழ் ராய்துர்கம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதே போன்று ஐதராபாத்தில் உள்ள சஞ்சீவ் நகர் போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
இந்த விஷயத்தில் விஜய்தேவரகொண்டா வழக்கு நீதிமன்றத்திற்கு வரும்போது நேரில் ஆஜராகி மன்னிப்பு கேட்டால் வழக்கு முடிவுக்கு வரும் இல்லாவிட்டால் விஜயதேவரகொண்டா கைது செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.