துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிக்க 3 கோடி சம்பளம் வாங்கிய பூஜா ஹெக்டே! | புகழ்ச்சியை தலையில் ஏற்றிக் கொள்ள மாட்டேன்! : கல்யாணி பிரியதர்ஷன் | விஜய்யின் தந்தை இயக்குனர் எஸ்.ஏ.சி.,யை டென்ஷன் ஆக்கிய கேள்வி! | திருமணம் செய்து கொள்ளாமல் இரட்டை குழந்தை பெற்றெடுத்த நடிகை பாவனா ரமண்ணா! | சிம்புவின் ‛அரசன்' படத்தில் இடம் பெறும் மூன்று முன்னணி நடிகைகள்! | அடூர் கோபாலகிருஷ்ணன் படத்தில் நடிக்காததால் தான் மோகன்லால் சூப்பர் ஸ்டார் ஆனார் ; குணச்சித்திர நடிகர் கிண்டல் | துல்கர் சல்மான் கார் பறிமுதல் விவகாரம் ; சுங்கத்துறைக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி | நாகார்ஜுனாவின் 100வது படத்தில் இணையும் நாகசைதன்யா - அகில் | இந்திய ராணுவ தலைமை தளபதி ஜெனரலை சந்தித்த மோகன்லால் | டீசலுக்காக படகு ஓட்டவும் மீன்பிடிக்கவும் பயிற்சி எடுத்த ஹரிஷ் கல்யாண் |
குக் வித் கோமாளி சீசன் 5-ல் தொகுப்பாளராக களமிறங்கிய மணிமேகலை நிகழ்ச்சியை விட்டு அதிரடியாக விலகியுள்ளார். இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள விளக்கத்தில் காசு பணத்தை காட்டிலும் சுயமரியாதை முக்கியம் என கூறியுள்ளார். அவரது பதிவில், 'குக் வித் கோமாளி நிகழ்ச்சி தொடங்கிய நாள் முதலே நான் அர்ப்பணிப்புடன் பணியாற்றி வருகிறேன். காசு, பணம், புகழை விட சுயமரியாதை தான் மிகவும் முக்கியம். எனவே குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலிருந்து விலகுகிறேன். இந்நிகழ்ச்சி மற்றொரு பெண் தொகுப்பாளினியால் முற்றிலுமாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.
குக்காக வந்த ஒருவர் தான் குக் என்பதை மறந்துவிட்டு என்னுடைய ஆங்கரிங் வேலைகளில் தலையிட்டு வருகிறார். நிறைய அடக்குமுறைகளால் இந்நிகழ்ச்சி அதன் அசல் தன்மையை இழந்துவிட்டது. முன்பு நான் பார்த்து, ரசித்து மகிழ்ச்சியாக இருந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சி இதுவல்ல' என பல தகவல்களை கூறியிருக்கிறார். சீசன் 1 முதல் தற்போதுவரை குக் வித் கோமாளியின் அனைத்து சீசன்களிலும் பங்கேற்றிருந்த மணிமேகலை இப்படி அதிரடியாக விலகியிருப்பதால் ரசிகர்களும் சோகமடைந்துள்ளனர்.