‛கில்லர்' முதல்கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு ‛ஜெயிலர்-2'வில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | காரில் கோளாறு: ஷாரூக்கான், தீபிகா படுகோனே மீது வழக்கு | ‛வார் - 2' படம் தோல்வி அடைந்ததால் ஜூனியர் என்டிஆரின் அடுத்த படத்தை கைவிட்ட நிறுவனம்! | எனது சொகுசு பங்களா வீடியோவை உடனே நீக்குங்கள்! - ஆலியா பட் வைத்த ஆவேச கோரிக்கை | 23 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் ‛ரன்' | சிவகார்த்திகேயனுக்கு போட்டியா : ‛கேபிஒய்' பாலா பதில் | பிளாஷ்பேக்: திகைக்க வைக்கும் 'த்ரில்லர்' திரைப்படத்தின் நாயகனாக எம் என் நம்பியார் நடித்த “திகம்பர சாமியார்” | லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் ‛பர்ஸ்ட் பன்ச்' எப்படி இருக்கு? | மகுடம் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது! | ஷாலின் சோயாவின் இயக்குனர் ஆசை! |
சின்னத்திரை பிரபலமான மணிமேகலை தமிழகத்தில் மிகப்பெரிய இன்ப்ளூயன்ஸராக மாறியிருக்கிறார். குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு பின் ரீ-எண்ட்ரி கொடுத்த அவர் தொடர்ந்து பல சேனல்களில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருவதோடு, யூ-டியூப் மற்றும் சோஷியல் மீடியாவிலும் இன்ப்ளூயன்ஸராக வளர்ந்துள்ளார். 3 வீடுகள், இரண்டு கார்கள், ஒரு சொகுசு பைக் என உல்லாசமாக வாழ்ந்து வரும் மணிகேலை தனக்கு சினிமா வாய்ப்புகள் குவிந்தும் அதை பயன்படுத்திக் கொள்ள விருப்பமில்லை என ஓப்பனாக பேசியிருக்கிறார்.
அண்மையில் அவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில், சினிமாவில் நடிக்க வாய்ப்புகள் வரவில்லையா? என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் கூறிய மணிமேகலை, ''நான் மியூசிக் சேனலில் மட்டும் தான் தொகுப்பாளினியாக வேண்டும் என்று முயற்சிகள் எடுத்து ஆடிஷனில் கலந்து கொண்டேன். அதன்பிறகு மற்ற இரண்டு சேனல்களிலும் தானாக தான் வாய்ப்பு வந்தது. இது ஒருபுறமிருக்க எனக்கு சினிமாவிலுமே வாய்ப்புகள் வந்தது. ஆனால், எனக்கு சினிமாவில் போவதற்கு விருப்பமில்லை. நான் இப்படியே ஜாலியாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். இதற்கு சினிமா சரிப்பட்டு வராது.
எனக்கு நடிக்கவும் தெரியாது, சுத்தமாகவும் எனக்கு வராது. என் கணவருக்கு அந்த பீல்டில் ஆசை இருக்கிறது. இப்போது ஷார்ட் பிலிம்களில் நடித்து கொண்டிருக்கிறார். எனக்கு அந்த பீல்டில் சுத்தமாக விருப்பமில்லை. அதனால் நான் நடிக்கவில்லை'' என அதில் கூறியிருக்கிறார்.