'ஸ்பிரிட்' படத்தை விட்டு வெளியேறிய தீபிகா படுகோனே! | அப்துல் கலாம் வாழ்க்கை வரலாற்றில் தனுஷ் | இலங்கையில் படமாகும் 'மதராஸி' பட கிளைமாக்ஸ்! | கமல் 237வது படத்தின் படப்பிடிப்பு எப்போது? புது தகவல் | சிவகார்த்திகேயன் கேட்டால் நகைச்சுவை வேடத்தில் நடிப்பீர்களா சூரி? சூரியின் பதில் இதோ.. | குபேரா படத்தின் இசை வெளியீட்டு விழா அப்டேட்! | போதைப்பொருள் பயன்படுத்த தனி ரூம் வசதி ; பெண் தயாரிப்பாளர் பகீர் குற்றச்சாட்டு | வார்-2வில் விஜய்யின் ஸ்டைலை காப்பி அடித்த ஹிருத்திக் ரோஷன் | தள்ளிப்போகும் 'தொடரும்' பட ஓடிடி ரிலீஸ் | ஜெயிலரின் வில்லனாக நடிக்க இருந்தது மம்முட்டி தான் ; ரகசியம் உடைத்த வசந்த் ரவி |
தமிழ் சினிமாவில் மறக்க முடியாத சில பாடல்களை தங்களது படங்களில் மீண்டும் சிலர் பயன்படுத்தியதைப் பார்த்திருக்கிறோம். அந்தப் பாடல்கள் இந்தக் காலத்திற்கும் பொருத்தமான விதத்தில் இருப்பதும் ஆச்சரியம்தான்.
தமிழ் சினிமா பாடல்களை தமிழ்ப் படங்களில் பயன்படுத்தியது போக தற்போது மலையாளப் படங்களிலும் பயன்படுத்த ஆரம்பித்துவிட்டார்கள்.
மலையாளத்தில் வெளிவந்து சூப்பர் ஹிட்டான 'மஞ்சும்மேல் பாய்ஸ்' படத்தில் 'குணா' படத்தில் இடம் பெற்ற 'கண்மணி அன்போடு…' பாடல்தான் படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம் என்று சொன்னால் அது மிகையில்லை. அந்தப் பாடலைப் படத்தில் முக்கியமான இடத்தில் கேட்கும் போது புல்லரித்தது என்று சொன்னவர்கள்தான் அதிகம். அதனால்தான் அந்தப் படம் தமிழிலும் பெரிய வெற்றியைப் பெற்றது. அந்தப் பாடலுக்கு தன்னிடம் உரிமை வாங்கவில்லை என இளையராஜா தரப்பிலிருந்து எதிர்ப்புக் குரல் எழுந்தது. தயாரிப்பு நிறுவனத்திற்கு அவர் தரப்பிலிருந்து வக்கீல் நோட்டீஸும் பறந்தது.
அடுத்து 'குருவாயூர் அம்பலநடையில்' என்ற மலையாளப் படத்தில் 'உள்ளத்தை அள்ளித்தா' படத்தின் சூப்பர் ஹிட் பாடலான 'அழகிய லைலா' பாடலைப் பயன்படுத்தி இருக்கிறார்கள். பிருத்விராஜ், பாசில் ஜோசப், நிகிலா விமல், யோகிபாபு மற்றும் பலர் நடிப்பில் மே மாதம் வெளிவந்த இந்தப் படமும் வெற்றி பெற்றது.
சமீபத்தில் ஓடிடியில் இப்படம் தமிழிலும் டப்பிங் ஆகி வெளியானது. அதன்பிறகுதான் தமிழ் ரசிகர்கள் இந்தப் படத்தைப் பார்த்தனர். அதில் தன் பழைய காதலியான நிகிலாவை படத்தின் நாயகன் மீண்டும் பார்க்கும் போது 'அழகிய லைலா' பாடல் ஒலிக்கும். பின் அடிக்கடி இந்தப் பாடல் இடம் பெறும். இந்தப் பாடலை சம்பந்தப்பட்ட உரிமை வைத்துள்ள இசை நிறுவனத்திடம் இருந்து முறையான அனுமதி பெற்றுத்தான் பயன்படுத்தி உள்ளார்களாம்.
அடுத்தடுத்து இரண்டு மலையாளப் படங்களில் தமிழ்ப் பாடல்கள் இடம் பெற்று அவையிரண்டும் தமிழ் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது. அதனால், இனி வரும் காலங்களில் இப்படியான பாடல்களை அடிக்கடி எதிர்பார்க்கலாம்.