11 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழில் நஸ்ரியா | ஹவுஸ்புல் ஆகும் ஜப்பானியத் திரைப்படம் | கார்மேனி செல்வத்தின் கதை என்ன? | பிளாஷ்பேக்: விஜயகாந்தின் இரட்டை வேட கணக்கை துவக்கிய ராமன் ஸ்ரீ ராமன் | பிளாஷ்பேக் : தேவதாஸ் படத்திலிருந்து நீக்கப்பட்ட சவுகார் ஜானகி | நடிப்பும், எழுத்தும் எனது இரு கண்கள்: 'லோகா' எழுத்தாளர் சாந்தி பாலச்சந்திரன் | சரோஜாதேவி, விஷ்ணுவர்தனுக்கு கர்நாடக ரத்னா விருது | பிகினிக்கு வயது ஒரு தடையா ? நோ… | தீபாவளி போட்டியில் 'காந்தா' ? | 14 ஆண்டுகளுக்கு பிறகு தயாராகும் ‛உருமி' இரண்டாம் பாகம் |
நடிகை பார்வதி மலையாள திரையுலகில் அறிமுகமாகி கிட்டத்தட்ட 20 வருடங்களை தொட போகிறார். இத்தனை வருடங்களில் அவர் நடித்தது குறைவான எண்ணிக்கை கொண்ட படங்களில் தான். காரணம் செலெக்ட்டிவ்வான நல்ல கதையும் கதாபாத்திரமும் கொண்ட கதைகளை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் பார்வதி. இதுநாள் வரை உணர்வுபூர்வமான கதைகளில், பெண்ணியம் பேசும் கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்து வந்தார்.
இந்தநிலையில் முதன் முறையாக 'பிரதம திருஷ்திய குற்றக்கார்' என்கிற போலீஸ் இன்வெஸ்டிகேஷன் கதையில் நடிக்கிறார். அது மட்டுமல்ல இந்த படத்தில் முதன்முறையாக போலீஸ் அதிகாரியாகவும் நடிக்கிறார் பார்வதி. சாஹத் என்பவர் இயக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் டிசம்பர் 25ம் தேதியிலிருந்து துவங்க இருக்கிறது என்கிற தகவலை தனது சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார் பார்வதி.