படம் 1% ஏமாற்றினாலும் என் வீடுதேடி வரலாம்: 'தி ராஜா சாப்' இயக்குனர் மாருதி பேச்சு | பிரியங்கா மோகனின் கன்னட படம் '666 ஆப்ரேஷன் ட்ரீம் தியேட்டர்' பர்ஸ்ட்லுக் வெளியீடு | பிரபாஸின் 'தி ராஜா சாப்' படத்தின் டிரைலர் இன்று வெளியாகவில்லை! வதந்தியை தெளிவுபடுத்திய படக்குழு! | விக்ரம் பிரபுவின் 'சிறை' படத்தை பாராட்டிய மாரி செல்வராஜ்! | 'டாக்சிக்'-ல் எலிசபெத் ஆக ஹூமா குரேஷி | ரஜினியை வைத்து முதல் மரியாதை போன்ற படம் இயக்க ஆசை! - சுதா கொங்கரா | 'பராசக்தி' படத்தின் இசை வெளியீட்டு விழா, எங்கே, எப்போது? | ரிலீசில் ரிகார்டு!: வசூலில் பெரும்பாடு: தமிழ் சினிமாவில் ரூ.2000 கோடியை ‛‛காலி'' செய்த 2025 | 'டாக்சிக்' படத்தின் அனுபவம் குறித்து ருக்மணி வசந்த்! | விஜய் முடிவை மாத்தணும்.. மீண்டும் நடிக்கணும்: நடிகர் நாசர் கோரிக்கை |

சென்னையில் நடந்த அறியாத பசங்க என்ற பட விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மூத்த இயக்குனர் எஸ்.பி.முத்துராமன் பேசியது : பள்ளியில் படிக்கும் போது சினிமாவில் இயக்குனராக வேண்டும் என்று பேசியவன் நான். சென்னைக்கு வந்து ஏவிஎம் ஸ்டூடியோவில் சேர்ந்தேன். ஆரம்பத்தில் எடிட்டிங் பழகினேன். பின்னர் உதவி இயக்குனராக வேலை செய்தேன். 20 ஆண்டுகளுக்கு பின் தான் கனி முத்து பாப்பா படத்தில் இயக்குனர் ஆனேன். என் அஸ்திவாரம் வலுவானது.
80 ஆண்டுகள் பாரம்பரியம் உள்ள ஏ.வி.எம் நிறுவனம் இப்பொழுது படம் தயாரிப்பதில்லை. இது குறித்து அவர்களிடம் கேட்ட போது இப்போது படம் தயாரித்து விடலாம் ஆனால் வியாபாரம் செய்வது கஷ்டமாக இருக்கிறது என்கிறார்கள். அதனால்தான் அவர்கள் படம் தயாரிப்பதில்லை. அந்த காலத்தில் ஏவிஎம் நிறுவனத்தை உருவாக்கிய ஏவி. மெய்யப்ப செட்டியார் பக்கா ஸ்கிரிப்ட் இருந்தால் தான் ஒரு படத்தை தொடங்குவார். அதனால் தான் ஏவிஎம் படங்கள் வெற்றி பெற்றன. உழைப்பு ஒழுக்கம் இருந்தால் சினிமாவில் ஜெயிக்கலாம். இவ்வாறு பேசினார்.