ரஜினியை வைத்து முதல் மரியாதை போன்ற படம் இயக்க ஆசை! - சுதா கொங்கரா | 'பராசக்தி' படத்தின் இசை வெளியீட்டு விழா, எங்கே, எப்போது? | ரிலீசில் ரிகார்டு!: வசூலில் பெரும்பாடு: தமிழ் சினிமாவில் ரூ.2000 கோடியை ‛‛காலி'' செய்த 2025 | 'டாக்சிக்' படத்தின் அனுபவம் குறித்து ருக்மணி வசந்த்! | விஜய் முடிவை மாத்தணும்.. மீண்டும் நடிக்கணும்: நடிகர் நாசர் கோரிக்கை | 'ஜனநாயகன்' பாடல் வெளியீட்டு விழாவில் விஜய் பேசியது என்ன? மறந்தது என்ன? | தியேட்டரை மட்டும் நம்பாதீங்க: 2025 சொல்லி கொடுத்த பாடம் | மலேசியாவில் மிரட்டிய 'ஜனநாயகன்' : 'பராசக்தி' படத்துக்கு பிரஷர் | சம்பள விஷயத்தில் 'கண்டிஷன்' போடும் நடிகை | அவமானங்களுக்கு 'ரியாக்ட்' பண்ணாதீர்கள்: நடிகர் சூரி 'அட்வைஸ்' |

சினிமாவின் வருகைக்கு முன் நடத்தப்பட்ட பல நாடகங்கள் பின்னர் திரைப்படங்களானது. தமிழ் நாடகங்கள் மட்டுமல்லாது தெலுங்கு, கன்னட நாடகங்களும், மராட்டிய நாடகங்களும் சினிமா ஆனது. ஒன்றிரண்டு மலையாள நாடகங்களும் சினிமா ஆனது. அதில் முக்கியமானது 'வைரமாலை'.
தோட்டக்கர விஸ்வநாதன் என்ற மலையாள நாடக ஆசிரியர் எழுதிய நாடகம் அங்கு வெற்றிகரமாக நடத்தப்பட்டு வந்தது. காணாமல் போன ஒரு வைரமாலையை சுற்றி நடக்கிற காமெடி கதை. நாடகத்தை பார்த்தவர்கள் சிரித்து சிரித்து வயிறு வலித்ததாக அப்போது கூறுவார்கள்.
இதனால் இந்த நாடகத்தை தமிழ் சினிமாவாக்க விரும்பினார் அப்போதைய மலையாள தயாரிப்பாளர் ஏ.சி.பிள்ளை. தமிழ் தயாரிப்பாளர் ஸ்ரீபாத சங்கருடன் இணைந்து இதனை தயாரித்தார். பத்மினி, ராகினி, ஆர்.எஸ்.மனோகர், தங்கேலு உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். விஸ்வநாதன்-ராமமூர்த்தி இசை அமைத்தனர்.
முழுநீள நகைச்சுவை சித்திரம் என்று விளம்பரம் செய்யப்பட்டு படம் வெளியானாலும், நாடகம் சிரிக்க வைத்த அளவிற்கு சினிமா சிரிக்க வைக்க தவறியதால் படம் தோல்வி அடைந்தது.