பிரபாஸின் 'தி ராஜா சாப்' படத்தின் டிரைலர் இன்று வெளியாகவில்லை! வதந்தியை தெளிவுபடுத்திய படக்குழு! | விக்ரம் பிரபுவின் 'சிறை' படத்தை பாராட்டிய மாரி செல்வராஜ்! | 'டாக்சிக்'-ல் எலிசபெத் ஆக ஹூமா குரேஷி | ரஜினியை வைத்து முதல் மரியாதை போன்ற படம் இயக்க ஆசை! - சுதா கொங்கரா | 'பராசக்தி' படத்தின் இசை வெளியீட்டு விழா, எங்கே, எப்போது? | ரிலீசில் ரிகார்டு!: வசூலில் பெரும்பாடு: தமிழ் சினிமாவில் ரூ.2000 கோடியை ‛‛காலி'' செய்த 2025 | 'டாக்சிக்' படத்தின் அனுபவம் குறித்து ருக்மணி வசந்த்! | விஜய் முடிவை மாத்தணும்.. மீண்டும் நடிக்கணும்: நடிகர் நாசர் கோரிக்கை | 'ஜனநாயகன்' பாடல் வெளியீட்டு விழாவில் விஜய் பேசியது என்ன? மறந்தது என்ன? | தியேட்டரை மட்டும் நம்பாதீங்க: 2025 சொல்லி கொடுத்த பாடம் |

தெலுங்கில் ராஜமவுலி இயக்கத்தில் மகேஷ்பாபு நடிக்கும் படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார் பிரியங்கா சோப்ரா. இதன் படப்பிடிப்பிற்காக அவ்வப்போது ஐதராபாத் வந்து செல்கிறார். அப்படி வந்து செல்லும்போதெல்லாம் ஐதராபாத்தில் பல பகுதிகளில் வீடியோக்களை எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருகிறார்.
சமீபத்தில் மகேஷ்பாபு, ராஜமவுலி, வில்லனாக நடிக்கும் நடிகர் பிரித்விராஜ் ஆகியோருக்கு இடையே எக்ஸ் பக்கத்தில் நடந்த சுவாரசியமான உரையாடலில் மகேஷ்பாபு ராஜமவுலியிடம், “நீங்கள் எப்போது சார் மகாபாரதத்தை ஆரம்பிக்க போகிறீர்கள் ? ஏற்கனவே நம்முடைய தெலுங்கு பெண் ஒருவர் (பிரியங்கா சோப்ரா) கடந்த ஜனவரியில் இருந்து இதற்காகவே ஐதராபாத் வீதிகள் ஒன்று விடாமல் சுற்றிக் கொண்டிருக்கிறார்” என்று பிரியங்கா சோப்ராவை குறிப்பிட்டு கிண்டல் அடித்திருந்தார்.
அதற்கு தற்போது கிண்டலாக பதில் சொல்லும் விதமாக விடியற்காலையில் ஐதராபாத் தெருக்களில் தான் எடுத்த சில புகைப்படங்களை மகேஷ்பாபுவின் பெயரை குறிப்பிட்டு பகிர்ந்து கொண்டுள்ளார் பிரியங்கா சோப்ரா. அது மட்டுமல்ல, “ஹலோ ஹீரோ நீங்கள் படப்பிடிப்பு தளத்தில் என்னிடம் சொன்ன கதைகளை எல்லாம் வெளியில் நான் லீக் பண்ண வேண்டும் என விரும்புகிறீர்களா?” என்றும் கிண்டலாக கேட்டுள்ளார்.