விஜயுடன் இணைய தயார்: ‛புலி' பட தயாரிப்பாளர் அறிவிப்பு | உண்மை சம்பவம் பின்னணியில் உருவான ‛ரோஜா மல்லி கனகாம்பரம்' | ‛போலீஸ் ஸ்டேஷன் மெயின் பூத்': ரம்யா கிருஷ்ணனின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது! | ராஷ்மிகாவின் ‛மைசா' படப்பிடிப்பு கேரளா அதிரப்பள்ளி காட்டுப் பகுதியில் தொடங்கியது! | அஜித் 64வது படம் : பிளானை மாற்றிய ஆதிக் ரவிச்சந்திரன்! | தன்னுடைய பெயரில் ரசிகர் நடத்தும் ஹோட்டலுக்கு அனுமதி அளித்த சிரஞ்சீவி | பஸ் விபத்து எதிரொலி ; மீனாட்சி சவுத்ரி போஸ்டர் வெளியீட்டை தள்ளிவைத்த நாக சைதன்யா படக்குழு | சீனியர் நடிகர் மதுவை நேரில் சென்று சந்தித்த மம்முட்டி | காந்தாராவை பணத்திற்காக எடுக்கவில்லை: ரிஷப் ஷெட்டி | 2030லாவது மகாபாரதத்தை ஆரம்பிப்பீர்களா ? ராஜமவுலிக்கு மகேஷ்பாபு கேள்வி |

விக்ரம், பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி ஆகியோர் நடிப்பில் உருவாகி உள்ள படம் தங்கலான். ரஞ்சித் இயக்கி உள்ளார். இந்த படம் வருகிற 15ம் தேதி திரைக்கு வருகிறது. நேற்று இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. அப்போது இப்படத்திற்காக சிலம்ப பயிற்சி எடுத்து சண்டை காட்சியில் நடத்திருக்கும் மாளவிகா மோகனன் மேடைக்கு வந்தபோது, இந்த மேடையில் நீங்கள் யாருடன் சிலம்ப சண்டை போட விரும்புகிறீர்கள்? என்று தொகுப்பாளர் ஒரு கேள்வி கேட்க, தங்கலான் என்று பதில் கொடுத்தார் மாளவிகா மோகனன். ஆனால் அதற்கு விக்ரம் மறுத்துவிட்டார். அதையடுத்து இப்படத்தில் நடித்திருக்கும் இன்னொரு நடிகையான பார்வதியை மேடைக்கு அழைத்து மாளவிகாவுடன் கம்பு சுற்ற வைத்தார்கள். அவர்கள் இருவரும் சிறிது நேரம் சிலம்பக் கம்புகளை கையில் பிடித்தபடி சுழற்றிக் கொண்டு நின்றார்கள்.