இளையராஜாவின் பெயரில் விருது வழங்கப்படும்; பாராட்டு விழாவில் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு | இளையராஜாவிற்கு பாராட்டு விழா : அரங்கம் அதிர இன்னிசை மழை ; முதல்வர், ரஜினி, கமல் பங்கேற்பு | நான் சரியான வாழ்க்கை துணையாக மாற முயற்சிக்கிறேன் : தமன்னா | கருவிலே உயிர் உருவாகும்போது உயிர் கொடுத்தவன் கடமையை மறக்கக்கூடாது : ஜாய் கிரிசில்டா பதிவு | ‛‛நான் தான் சிஎம்'' : பார்த்திபன் வெளியிட்ட அறிவிப்பு | சேதுராஜன் ஐபிஎஸ் : மீண்டும் போலீஸ் கதாபாத்திரத்தில் பிரபுதேவா | மீண்டும் ஒரு சர்வைவல் திரில்லரில் நடிக்கும் மஞ்சும்மேல் பாய்ஸ் நடிகர் | மோகன்லாலின் ஆஸ்தான இயக்குனரின் அரசியல் படத்தில் கைகோர்த்த நிவின்பாலி | ஹன்சிகா மீது பதியப்பட்ட எப்ஐஆரை தள்ளுபடி செய்ய உயர்நீதிமன்றம் மறுப்பு | இளையராஜா இசையில் உருவாகும் ஈழத்தமிழ் படம் |
விக்ரம், பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி ஆகியோர் நடிப்பில் உருவாகி உள்ள படம் தங்கலான். ரஞ்சித் இயக்கி உள்ளார். இந்த படம் வருகிற 15ம் தேதி திரைக்கு வருகிறது. நேற்று இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. அப்போது இப்படத்திற்காக சிலம்ப பயிற்சி எடுத்து சண்டை காட்சியில் நடத்திருக்கும் மாளவிகா மோகனன் மேடைக்கு வந்தபோது, இந்த மேடையில் நீங்கள் யாருடன் சிலம்ப சண்டை போட விரும்புகிறீர்கள்? என்று தொகுப்பாளர் ஒரு கேள்வி கேட்க, தங்கலான் என்று பதில் கொடுத்தார் மாளவிகா மோகனன். ஆனால் அதற்கு விக்ரம் மறுத்துவிட்டார். அதையடுத்து இப்படத்தில் நடித்திருக்கும் இன்னொரு நடிகையான பார்வதியை மேடைக்கு அழைத்து மாளவிகாவுடன் கம்பு சுற்ற வைத்தார்கள். அவர்கள் இருவரும் சிறிது நேரம் சிலம்பக் கம்புகளை கையில் பிடித்தபடி சுழற்றிக் கொண்டு நின்றார்கள்.