ஒரே நேரத்தில் இரு லட்சுமிகாந்தன் கொலை வழக்கு படமா? | சூப்பர் மாரி சூப்பர் : ‛பைசன்' படத்திற்கு ரஜினி பாராட்டு | ‛பரிசு' : லட்சியத்திற்காக போராடும் பெண்ணின் கதை | ஒரு ‛என்' சேர்த்தால், வாழ்க்கை மாறிடுமா? : ஹன்சிகாவின் ஆசை | தெலுங்கில் 100 கோடி வசூலித்த 'காந்தாரா சாப்டர் 1' | 'கப்ஜா' படத்தால் 'இன்ஸ்பயர்' ஆன 'ஓஜி' : இயக்குனர் கருத்தால் சர்ச்சை | விஜய்யின் 'முரசு' படம் நின்று போக இப்படி ஒரு காரணமா ? 20 வருடம் கழித்து வெளியான தகவல் | முதன்முதலாக குழந்தையை அறிமுகப்படுத்திய தீபிகா, ரன்வீர் சிங் | திலீப்பின் கல்யாணராமன் படத்தை 23 வருடங்களுக்குப் பிறகு ரீ ரிலீஸ் செய்யும் நடிகர் லால் | தமிழ் இயக்குனர்களின் சாதியப் படங்கள் : துருவ் விக்ரம் விளக்கம் |
கடந்த வருடம் தமிழில் வெளியான 'தங்கலான்' மற்றும் மலையாளத்தில் வெளியான 'உள்ளொழுக்கு' ஆகிய படங்களில் வித்தியாசமான கதாபாத்திரம் மற்றும் நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தார் நடிகை பார்வதி. தற்போது அவர் மலையாளத்தில் 'பிரதம திருஷ்ய குற்றக்கார்' மற்றும் 'ஐ நோபடி' என இரண்டு படங்களில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் 'ஐ நோபடி' படத்தின் படப்பிடிப்பை தற்போது நிறைவு செய்துள்ளார் பார்வதி. இந்த படத்தில் கதாநாயகனாக பிரித்விராஜ் நடிக்கிறார். கடந்த 2018ல் வெளியான மை ஸ்டோரி மற்றும் கூடே என இரண்டு படங்களில் பிரித்விராஜுடன் இணைந்து நடித்திருந்த பார்வதி ஏழு வருடங்களுக்கு பிறகு மூன்றாவது முறையாக அவருடன் இணைந்து இந்த படத்தில் நடித்துள்ளார். மம்மூட்டி நடித்த ரோஷாக் படத்தை இயக்கிய நிசாம் பஷீர் இன்று படத்தை இயக்கியுள்ளார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததை தொடர்ந்து இது குறித்த புகைப்படங்களை தனது சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டுள்ள பார்வதி, “மனித கதைகளை சொல்ல ஒன்றிணையும் குழுக்களில் ஒரு பகுதியாக இருப்பதற்கான வாய்ப்புகளை நான் ஒருபோதும் நிராகரித்தது இல்லை.. ஐ நோபடி படப்பிடிப்பு தளத்தில் என்ன ஒரு நெகிழ்ச்சியான கடைசி நாள்.. கட்டாயம் சொல்லப்பட வேண்டிய இந்த கதையை தயாரித்ததற்காக அதில் என்னை ஒரு அங்கமாக மாற்றியதற்காக தயாரிப்பாளர் சுப்ரியா பிரித்விராஜுக்கு நன்றி” என்று கூறியுள்ளார்.