துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிக்க 3 கோடி சம்பளம் வாங்கிய பூஜா ஹெக்டே! | புகழ்ச்சியை தலையில் ஏற்றிக் கொள்ள மாட்டேன்! : கல்யாணி பிரியதர்ஷன் | விஜய்யின் தந்தை இயக்குனர் எஸ்.ஏ.சி.,யை டென்ஷன் ஆக்கிய கேள்வி! | திருமணம் செய்து கொள்ளாமல் இரட்டை குழந்தை பெற்றெடுத்த நடிகை பாவனா ரமண்ணா! | சிம்புவின் ‛அரசன்' படத்தில் இடம் பெறும் மூன்று முன்னணி நடிகைகள்! | அடூர் கோபாலகிருஷ்ணன் படத்தில் நடிக்காததால் தான் மோகன்லால் சூப்பர் ஸ்டார் ஆனார் ; குணச்சித்திர நடிகர் கிண்டல் | துல்கர் சல்மான் கார் பறிமுதல் விவகாரம் ; சுங்கத்துறைக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி | நாகார்ஜுனாவின் 100வது படத்தில் இணையும் நாகசைதன்யா - அகில் | இந்திய ராணுவ தலைமை தளபதி ஜெனரலை சந்தித்த மோகன்லால் | டீசலுக்காக படகு ஓட்டவும் மீன்பிடிக்கவும் பயிற்சி எடுத்த ஹரிஷ் கல்யாண் |
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், சூர்யா, பூஜா ஹெக்டே மற்றும் பலர் நடிக்கும் சூர்யாவின் 44வது படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு அந்தமானில் நிறைவடைந்துள்ளது.
ஜுன் மாதம் முதல் வாரத்தில் அந்தமானில் ஆரம்பமான முதல் கட்டப் படப்பிடிப்பு ஜுலை முதல் வாரத்தில் முடிந்துள்ளது. மலையாள நடிகர் ஜோஜு ஜார்ஜும் அந்தமான் படப்பிடிப்பில் கலந்து கொண்டார். ஜெயராம், கருணாகரன் மற்றும் பலர் இப்படத்தில் நடிக்கிறார்கள். அடுத்த கட்டப் படப்பிடிப்பு ஊட்டியில் நடைபெற உள்ளது.
இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாவதற்கு முன்பாக சிறிய வீடியோ முன்னோட்டம் ஒன்றையும் வெளியிட்டிருந்தார்கள். கார்த்திக் சுப்பராஜ், சூர்யா முதல் முறை இணையும் படம் என்பதால் படம் மீது அதிக எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. சூர்யாவின் பிறந்தநாளான ஜூலை 23ல் படத்தின் முதல் பார்வை வெளியாகும் எனத் தெரிகிறது.