விஜய், மோகன்லாலுடன் இணைந்து நடிக்கும் கோமல் சர்மா | வானத்தில் பறந்த இந்தியன் கொடி | ஜமா படத்திற்காக நிஜ தெருக்கூத்து கலைஞர்களை பாடவைத்து இசையமைத்த இளையராஜா | ஸ்பெயின் டென்னிஸ் வீரரையும் விட்டு வைக்காத ஆவேசம் பட பாடல் | திரிஷா, வினய்யை தொடர்ந்து ஐடென்டி படப்பிடிப்பை முடித்த டொவினோ தாமஸ் | அமெரிக்காவில் கருட மகாராஜாவை சந்தித்த வெங்கட்பிரபு | விஜய்யின் ஓப்பனிங் பாடல்களில் கவனம் செலுத்தாத அனிருத் : பாடலாசிரியர் கபிலன் ஆதங்கம் | கூலி படப்பிடிப்பிற்காக ஐதராபாத் வந்த ரஜினியை அழைத்துச் சென்ற மோகன்பாபு | ராஜூ முருகனுக்குக் கை கொடுத்த சசிகுமார் | அமெரிக்க வசூலில் 100 கோடியைக் கடந்த 'கல்கி 2898 ஏடி' |
மலையாள திரையுலகின் நடிகர் சங்கமான 'அம்மா' பொதுக்குழு கூட்டம் சமீபத்தில் நடைபெற்றது. இதில் புதிய நிர்வாகிகள் தேர்வு நடந்தது. ஆனால் இந்த நிகழ்ச்சியின் பாதுகாப்பிற்காக வரவழைக்கப்பட்டிருந்த பவுன்சர்கள், கூட்டம் நடந்த அரங்கிற்குள் பத்திரிகையாளர்களை நுழைய விடாமல் தடுத்ததுடன், அவர்களை வெளியே கொட்டும் மழையில் காத்திருக்க வைத்தனர். இந்த நிலையில் பத்திரிகையாளர்களுக்கு ஏற்பட்ட இந்த சங்கடத்திற்கு தற்போது புதிய பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நடிகர் சித்திக் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்பதாக கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறும்போது, “அம்மா பொதுக்குழு கூட்டம் நடைபெற்றபோது பத்திரிக்கையாளர்களுக்கு மன உளைச்சல் ஏற்படும் விதமாக சில நிகழ்வுகள் நடந்தது. இதற்கு நானே முழு பொறுப்பேற்றுக் கொள்கிறேன். என்னுடைய அஜாக்கிரதையால் தான் இது நடந்தது. சில சொந்த காரணங்களால் நான் அவசரமாக அந்த அரங்கை விட்டு வெளியேற வேண்டி இருந்தது. அதனாலேயே பத்திரிக்கையாளர்களுக்கு இந்த சங்கடம் நிகழ்ந்தது. அவர்களிடம் நான் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டுக் கொள்வதுடன் எதிர்காலத்தில் இதுபோன்று ஒரு நிகழ்வு நடக்காமல் பார்த்துக் கொள்வேன் என்று உறுதியும் அளிக்கிறேன்” என்று கூறியுள்ளார் நடிகர் சித்திக்.