'ஆர்யமாலா' என்னுடைய படம்: தயாரிப்பாளர் மீது இயக்குனர் குற்றச்சாட்டு | மீண்டும் வில்லியாகும் பரீனா ஆசாத் | ‛எதிர்நீச்சல்-2 கிடையாது.. ஆனால்!..' : திருச்செல்வம் கொடுத்த சர்ப்ரைஸ் | விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து விட்டாரா விமல்? | சமந்தாவிடம் வருத்தம் தெரிவித்த டாக்டர்! | 'கேம் சேஞ்சர்' அப்டேட் கொடுத்த ஷங்கர் | காதலனை அறிமுகப்படுத்திய ஜெய்பீம் நடிகை ரஜிஷா | எஸ்.எஸ்.ராஜமவுலியின் வரலாற்று ஆவணப்படம்: நெட்பிளிக்சில் வெளியாகிறது | 'பவுண்ட் புட்டேஜ்' தொழில்நுட்பத்தில் உருவாகும் மஞ்சு வாரியர் படம் | விஜய் கட்சியில் சேரத் தயாராக இருக்கும் ராதாரவி |
மலையாளத்தில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு சைக்கோ கிரைம் திரில்லர் படமாக வெளியான பாரன்சிக் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. முழுக்க முழுக்க பாரன்சிக் டிபார்ட்மெண்ட்டை மையப்படுத்தி உருவான இந்த படத்தை அகில்பால் - அனாஸ்கான் என்கிற இரட்டை இயக்குனர்கள் இயக்கியிருந்தனர்.
இந்த படத்தை தொடர்ந்து தற்போது அவர்கள் ஐடென்டி என்கிற படத்தை இயக்கி வருகிறார்கள். இந்த படத்திலும் டொவினோ தாமஸ் தான் கதாநாயகனாக நடிக்கிறார். ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு இந்த படத்தில் நடிப்பதன் மூலம் மலையாள திரையுலகில் மீண்டும் அடி எடுத்து வைத்துள்ளார் நடிகை திரிஷா. நடிகர் வினய் ராய் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு திரிஷா, அதன்பிறகு நடிகர் வினய் ராய் இருவரும் இந்த படத்தில் தங்களது போர்ஷனை நடித்து முடித்தனர். கிட்டத்தட்ட 130 நாட்களுக்கு மேல் படப்பிடிப்பு நடைபெற்ற நிலையில் தற்போது நாயகன் டொவினோ தாமஸும் இந்த படத்தில் தனது காட்சிகளை நிறைவு செய்துள்ளார். அதேசமயம் இன்னும் சில நாட்கள் வேறு சில காட்சிகளை இயக்குனர்கள் படமாக்க இருக்கிறார்கள் என்றும் விரைவில் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் துவங்க இருக்கிறது என்றும் படக்குழுவினர் தரப்பிலிருந்து சொல்லப்படுகிறது.