Advertisement

சிறப்புச்செய்திகள்

கலைமாமணி விருது பெற்றனர் சாய் பல்லவி, அனிருத், விக்ரம் பிரபு | மீண்டும் தனுஷ் படத்திற்கு இசையமைக்கும் அனிருத் | டியூட் சமூகப் பிரச்னையை வெளிச்சம் போட்டு காட்டும் : சொல்கிறார் பிரதீப் ரங்கநாதன் | கமலுக்கு அடுத்து அழகான ஹீரோ ஹரிஷ் கல்யாண் தான் : சொல்கிறார் இயக்குனர் மிஷ்கின் | ரஜினியின் வேட்டையன் வெளியாகி ஓராண்டு நிறைவு : இயக்குனர் ஞானவேல் வெளியிட்ட பதிவு | கணவரின் ஆயுள் நீடிக்க காஜல் அகர்வால் கர்வா சவுத் பூஜை | பிளாஷ்பேக்: ரஜினி படத்தில் நடிக்க மறுத்த சிவாஜி | பிளாஷ்பேக் : 36 ஆண்டுகள் இருட்டு அறையில் தனிமையில் வாழ்ந்த நடிகை | முதல் படத்திலேயே ஆக்ஷன் ஹீரோயின் ஆன சுஷ்மிதா சுரேஷ் | 'பேட்டில்' படத்தில் ராப் பாடகரின் வாழ்க்கை |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பிளாஷ்பேக் : 36 ஆண்டுகள் இருட்டு அறையில் தனிமையில் வாழ்ந்த நடிகை

11 அக், 2025 - 04:23 IST
எழுத்தின் அளவு:
Flashback-The-actress-who-lived-alone-in-a-dark-room-for-36-years

'படையப்பா' படத்தில் தன் காதலை உதாசீனப்படுத்திய ரஜினியை வெறுத்து ரம்யா கிருஷ்ணன் பல ஆண்டுகள் இருட்டு அறையில் தனியாக வசித்து தன்னைதானே தண்டித்ததை கதையாக தெரியும். ஆனால் அது நிஜத்திலும் நடந்துள்ளது.

பிரபலமான பெங்காலி நடிகை சுசித்ரா சென், இயற்பெயர் ரோமா தாஸ்குப்தா. 1931ம் ஆண்டு பங்களாதேஷில் உள்ள பப்னா என்ற இடத்தில் பிறந்தார். இந்தியா பிரிவினைக்குப் பிறகு அவரது குடும்பம் கோல்கட்டாவிற்கு குடியேறியது. பின்னர் பிரபல தொழிலதிபர் ஆதிநாத் சென்னின் மகன் திபநாத் சென் என்பவரை அவர் திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்குப் பிறகுதான் அவர் நடிகை ஆனார். 1952ம் ஆண்டு 'சேஷ் கோத்தாய்' என்ற பெங்காலி திரைப்படத்தில் அறிமுகமானார். இந்த படம் வெளிவரவில்லை. இதன்பிறகு நடித்த 'ஷாரே சுவத்தோர்' என்ற திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது. இந்த படத்தில் நாயகனாக நடித்த உத்தம் குமாருடன் இணைந்து 30 படங்களில் ஜோடியாக நடித்தார்.

பெங்காலி படம் அல்லாது தேவதாஸ் உள்ளிட்ட பல இந்திப் படங்களிலும் நடித்தார். 'சாத் பாகே பந்தா' படத்திற்காக மாஸ்கோ சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த நடிகைக்கான விருதை பெற்றார்.

சினிமாவில் உச்சத்தில் இருந்ததால் அவரால் தனது கணவரோடு அதிகநேரம் செலவிடமுடியவில்லை. இதன் காரணமாக மதுவுக்கு அடிமையான கணவர் மனைவியை பிரிந்து அமெரிக்கா சென்றவர் அங்கேயே மரணம் அடைந்தார்.

கணவரின் சாவுக்கு தான்தான் காரணம் என்ற குற்ற உணர்ச்சியால் தவித்த சுசித்ரா சென், சினிமாவில் நடிப்பதை நிறுத்தி விட்டு தனி அறையில் வாழத் தொடங்கினார். சுமார் 36 வருடங்கள், அவர் தனது வீட்டின் ஒரு குறிப்பிட்ட அறைக்குள் தனிமையில் வாழ்ந்தார். நெருங்கிய குடும்பத்தினரைத் தவிர வேறு யாரையும் அவர் சந்திக்கவில்லை. தனது 83வது வயதில், அதே தனிமை அறையில் மரணம் அடைந்தார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
முதல் படத்திலேயே ஆக்ஷன் ஹீரோயின் ஆன சுஷ்மிதா சுரேஷ்முதல் படத்திலேயே ஆக்ஷன் ஹீரோயின் ஆன ... பிளாஷ்பேக்: ரஜினி படத்தில் நடிக்க மறுத்த சிவாஜி பிளாஷ்பேக்: ரஜினி படத்தில் நடிக்க ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    Tamil New Film Party
    • பார்ட்டி
    • நடிகர் : ஜெய் ,சரத்குமார்,சந்திரன் (கயல்)
    • நடிகை : ரெஜினா ,நிவேதா பெத்ராஜ்
    • இயக்குனர் :வெங்கட் பிரபு
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2025 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in