பவன் கல்யாண் பேரைச் சொல்லி கைத்தட்டல் வாங்கிய எஸ்ஜே சூர்யா | ரூ.1000 கோடி வசூலைக் கடக்குமா 'கல்கி 2898 ஏடி' | 'ஆர்யமாலா' என்னுடைய படம்: தயாரிப்பாளர் மீது இயக்குனர் குற்றச்சாட்டு | மீண்டும் வில்லியாகும் பரீனா ஆசாத் | ‛எதிர்நீச்சல்-2 கிடையாது.. ஆனால்!..' : திருச்செல்வம் கொடுத்த சர்ப்ரைஸ் | விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து விட்டாரா விமல்? | சமந்தாவிடம் வருத்தம் தெரிவித்த டாக்டர்! | 'கேம் சேஞ்சர்' அப்டேட் கொடுத்த ஷங்கர் | காதலனை அறிமுகப்படுத்திய ஜெய்பீம் நடிகை ரஜிஷா | எஸ்.எஸ்.ராஜமவுலியின் வரலாற்று ஆவணப்படம்: நெட்பிளிக்சில் வெளியாகிறது |
தெருக்கூத்து கலைஞர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து ஏற்கனவே சில படங்கள் வந்துள்ளன. அந்த வகையில் அதையே சற்று வித்தியாசமான கோணத்தில் காட்டும் விதமாக உருவாகி வரும் படம் ஜமா. பாரி இளவழகன் என்பவர் இந்த படத்தை இயக்கியுள்ளதுடன் படத்தின் கதாநாயகனாகவும் நடித்துள்ளார். அம்மு அபிராமி கதாநாயகியாக நடித்துள்ளார். சிறிய பட்ஜெட் படம் என்றாலும் இந்த படத்தின் கதையை கேட்டதும் இசையமைக்க ஒப்புக் கொண்டுள்ளார் இளையராஜா.
அதுமட்டுமல்ல இந்த படத்திற்கு சினிமா பாடல்களுக்காக பயன்படுத்தும் கருவிகளை பயன்படுத்தி சினிமாத்தனமான பாடல்களையும் இசையையும் கொடுக்க இளையராஜா விரும்பவில்லை. அதற்கு பதிலாக நிஜமான தெருக்கூத்து கலைஞர்களை தனது இசைக்கூடத்திற்கு வரவழைத்து அவர்கள் போக்கிலேயே பாடல்களை பாட விட்டும், அவர்களது இசைக்கருவிகளை இசைக்க விட்டும் அதை எல்லாம் ஒலிப்பதிவு செய்து இந்த படத்தில் அழகாக இசை கோர்ப்பு செய்துள்ளாராம் இளையராஜா.
தமிழ்நாட்டில் உள்ள தெருக்கூத்து கலைஞர்களின் வாழ்க்கை முறை மற்றும் சவால்களை மையமாக வைத்து உருவாகும் படம் இது. குறிப்பாக, நாடகத்தின் போது ஆண் கலைஞர்கள் இந்தக் கலைக்காக பெண் வேடமிடும்போது, அவர்கள் அனுபவிக்கும் உணர்ச்சி, மனதின் மாற்றங்கள் மற்றும் சமூகத்தில் அவர்கள் எதிர்கொள்ளும் சவால்களை இந்தப் படம் விவரிக்கிறது.