துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிக்க 3 கோடி சம்பளம் வாங்கிய பூஜா ஹெக்டே! | புகழ்ச்சியை தலையில் ஏற்றிக் கொள்ள மாட்டேன்! : கல்யாணி பிரியதர்ஷன் | விஜய்யின் தந்தை இயக்குனர் எஸ்.ஏ.சி.,யை டென்ஷன் ஆக்கிய கேள்வி! | திருமணம் செய்து கொள்ளாமல் இரட்டை குழந்தை பெற்றெடுத்த நடிகை பாவனா ரமண்ணா! | சிம்புவின் ‛அரசன்' படத்தில் இடம் பெறும் மூன்று முன்னணி நடிகைகள்! | அடூர் கோபாலகிருஷ்ணன் படத்தில் நடிக்காததால் தான் மோகன்லால் சூப்பர் ஸ்டார் ஆனார் ; குணச்சித்திர நடிகர் கிண்டல் | துல்கர் சல்மான் கார் பறிமுதல் விவகாரம் ; சுங்கத்துறைக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி | நாகார்ஜுனாவின் 100வது படத்தில் இணையும் நாகசைதன்யா - அகில் | இந்திய ராணுவ தலைமை தளபதி ஜெனரலை சந்தித்த மோகன்லால் | டீசலுக்காக படகு ஓட்டவும் மீன்பிடிக்கவும் பயிற்சி எடுத்த ஹரிஷ் கல்யாண் |
தெருக்கூத்து கலைஞர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து ஏற்கனவே சில படங்கள் வந்துள்ளன. அந்த வகையில் அதையே சற்று வித்தியாசமான கோணத்தில் காட்டும் விதமாக உருவாகி வரும் படம் ஜமா. பாரி இளவழகன் என்பவர் இந்த படத்தை இயக்கியுள்ளதுடன் படத்தின் கதாநாயகனாகவும் நடித்துள்ளார். அம்மு அபிராமி கதாநாயகியாக நடித்துள்ளார். சிறிய பட்ஜெட் படம் என்றாலும் இந்த படத்தின் கதையை கேட்டதும் இசையமைக்க ஒப்புக் கொண்டுள்ளார் இளையராஜா.
அதுமட்டுமல்ல இந்த படத்திற்கு சினிமா பாடல்களுக்காக பயன்படுத்தும் கருவிகளை பயன்படுத்தி சினிமாத்தனமான பாடல்களையும் இசையையும் கொடுக்க இளையராஜா விரும்பவில்லை. அதற்கு பதிலாக நிஜமான தெருக்கூத்து கலைஞர்களை தனது இசைக்கூடத்திற்கு வரவழைத்து அவர்கள் போக்கிலேயே பாடல்களை பாட விட்டும், அவர்களது இசைக்கருவிகளை இசைக்க விட்டும் அதை எல்லாம் ஒலிப்பதிவு செய்து இந்த படத்தில் அழகாக இசை கோர்ப்பு செய்துள்ளாராம் இளையராஜா.
தமிழ்நாட்டில் உள்ள தெருக்கூத்து கலைஞர்களின் வாழ்க்கை முறை மற்றும் சவால்களை மையமாக வைத்து உருவாகும் படம் இது. குறிப்பாக, நாடகத்தின் போது ஆண் கலைஞர்கள் இந்தக் கலைக்காக பெண் வேடமிடும்போது, அவர்கள் அனுபவிக்கும் உணர்ச்சி, மனதின் மாற்றங்கள் மற்றும் சமூகத்தில் அவர்கள் எதிர்கொள்ளும் சவால்களை இந்தப் படம் விவரிக்கிறது.