ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் |
வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய், சினேகா, மீனாட்சி சவுத்ரி, பிரபுதேவா, மோகன், பிரசாந்த் உள்ளிட்டோர் நடிப்பில் தயாராகி வரும் படம் ‛தி கோட்'. படப்பிடிப்பு முடிந்து மற்ற பணிகள் நடக்கின்றன. யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். செப்., 5ல் படம் ரிலீஸாகிறது. ஏற்கனவே படத்திலிருந்து முதல்பாடல் வெளியாகி வரவேற்பை பெற்றது.
இருதினங்களுக்கு முன் ‛‛சின்ன சின்ன கண்கள்'' என்ற இரண்டாவது பாடலை வெளியிட்டனர். இதை விஜய்யும், மறைந்த பாடகி பவதாரிணியும் பாடினர். ஏஐ தொழில்நுட்பத்தில் பவதாரிணியின் குரலை பயன்படுத்தி பாட வைத்தார் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா.
யுவன் வெளியிட்ட பதிவில், ‛‛இந்த பாடல் எனக்கு ஸ்பெஷலானது. இதை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. இப்பாடல் உருவாக்கத்தின் போது உடல்நலம் தேறிய பின் பவதாரிணி பாடினால் நன்றாக இருக்கும் என நானும், வெங்கட் பிரபுவும் எண்ணினோம். ஆனால் ஒருமணிநேரம் கழித்து அவர் இறந்த செய்தி வந்தது. அவரது குரலை இப்படி பயன்படுத்துவேன் என நினைக்கவில்லை. எனது இசை குழுவிற்கும், இதை சாத்தியப்படுத்திய அனைவருக்கும் நன்றி'' என உருக்கமாக குறிப்பிட்டுள்ளார்.