ரஜினி படத்தை தயாரிக்கும் கமல்: சுந்தர் சி இயக்குகிறார் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது | 'பராசக்தி' படம் என் மீதான கவர்ச்சி பிம்பத்தை மாற்றும்! -ஸ்ரீ லீலா நம்பிக்கை | ஸ்ரீகாந்த், ஷ்யாம் நடிப்பில் தி ட்ரெய்னர் | 'லட்சுமிகாந்தன் கொலை வழக்கு' படப்பிடிப்பு தொடங்கியது | வெப் தொடரான கார்கில் போர் | ஹாலிவுட் நடிகை டயான் லாட் காலமானார் | இயக்குனராக புதிய பிறப்பு கொடுத்தவர் நாகார்ஜுனா : ராம்கோபால் வர்மா நெகிழ்ச்சி | என்னுடைய தொடர் வெற்றிக்கு இதுதான் காரணம்: விஷ்ணு விஷால் | மணிரத்னம் படத்தில் நடிப்பது பெரிய ஆசீர்வாதம்: பிரியாமணி | கேரள அரசு விருது குழுவின் தலைமையை கடுமையாக விமர்சித்த மாளிகைப்புரம் சிறுமி |

இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளும் பாடகியுமான பவதாரிணி கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 25-ந்தேதி உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். இவர் மறைந்து ஓராண்டு ஆன நிலையில் அவரது நினைவை குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் பகிர்ந்து வருகின்றனர்.
அந்த வகையில், பாடகியும், பவதாரிணியின் தோழியுமான ஷாலினி சிங் கூறியிருப்பதாவது: பவதாவிற்கு பிறந்தநாள் வாழ்த்துகள். இந்தப் பாடல்களை நீங்கள் எவ்வளவு நேசித்தீர்கள் என்பது எனக்குத் தெரியும், உங்கள் பிறந்தநாளில், எனக்குத் தெரிந்த விதத்தில் - இசை மூலம் -உங்களை கவுரவிக்க விரும்பினேன். உங்கள் தந்தை மேஸ்ட்ரோ இளையராஜாவுக்காக நீங்கள் மிகவும் அழகாகப் பாடிய பாடல்களையும் ஒன்றிணைக்கிறது.
நீங்கள் பிரிந்து ஒரு வருடம் ஆகிறது. ஆனால் உங்கள் குரல், உங்கள் சிரிப்பு மற்றும் நாங்கள் பகிர்ந்து கொண்ட நினைவுகள் அப்படியே உள்ளன. இந்த அஞ்சலி உங்களைக் கொண்டாடுவதற்கான எனது வழி. உங்களை மிகவும் மிஸ் செய்கிறோம், எப்போதும் நினைவில் வைத்திருக்கிறோம், என்றென்றும் நேசிக்கிறோம் என தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்த கோட் படத்தில் ஏ ஐ தொழில் நுட்பம் மூலம் பவதாரணி குரலை அவரது சகோதரர்களுக்கான யுவன் சங்கர் ராஜா மற்றும் வெங்கட் பிரபு ஆகிய அழகாக ரீ கிரியேட் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.