பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளும் பாடகியுமான பவதாரிணி கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 25-ந்தேதி உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். இவர் மறைந்து ஓராண்டு ஆன நிலையில் அவரது நினைவை குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் பகிர்ந்து வருகின்றனர்.
அந்த வகையில், பாடகியும், பவதாரிணியின் தோழியுமான ஷாலினி சிங் கூறியிருப்பதாவது: பவதாவிற்கு பிறந்தநாள் வாழ்த்துகள். இந்தப் பாடல்களை நீங்கள் எவ்வளவு நேசித்தீர்கள் என்பது எனக்குத் தெரியும், உங்கள் பிறந்தநாளில், எனக்குத் தெரிந்த விதத்தில் - இசை மூலம் -உங்களை கவுரவிக்க விரும்பினேன். உங்கள் தந்தை மேஸ்ட்ரோ இளையராஜாவுக்காக நீங்கள் மிகவும் அழகாகப் பாடிய பாடல்களையும் ஒன்றிணைக்கிறது.
நீங்கள் பிரிந்து ஒரு வருடம் ஆகிறது. ஆனால் உங்கள் குரல், உங்கள் சிரிப்பு மற்றும் நாங்கள் பகிர்ந்து கொண்ட நினைவுகள் அப்படியே உள்ளன. இந்த அஞ்சலி உங்களைக் கொண்டாடுவதற்கான எனது வழி. உங்களை மிகவும் மிஸ் செய்கிறோம், எப்போதும் நினைவில் வைத்திருக்கிறோம், என்றென்றும் நேசிக்கிறோம் என தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்த கோட் படத்தில் ஏ ஐ தொழில் நுட்பம் மூலம் பவதாரணி குரலை அவரது சகோதரர்களுக்கான யுவன் சங்கர் ராஜா மற்றும் வெங்கட் பிரபு ஆகிய அழகாக ரீ கிரியேட் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.