பராசக்தி முதல் பாடலான 'அடி அலையே' வெளியீடு | தயாரிப்பாளர்களுக்கு கூட பாடல் உரிமையை வழங்கியது இல்லை: இளையராஜா | 'ஜனநாயகன்' படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு : நவ., 8ல் முதல் பாடல் | சத்ய சாய் பாபாவின் மகிமையை சொல்லும் ‛அனந்தா' : நவ., 23ல் வெளியீடு | கிஸ் முதல் நெட்வொர்க் வரை... இந்த வாரா ஓடிடி ரிலீஸ்...! | ''பீரியட் படம் பண்ணுவது தனி அனுபவம்... டைம் மிஷின் மூலம் அந்த காலம் செல்வது மாதிரி'': துல்கர் சல்மான் | ரோஜா 'கம்பேக்': 'லெனின் பாண்டியன்' படத்தில் நடிக்கிறார் | மணிரத்னம் படம் : சிம்புவிற்கு பதில் விஜய் சேதுபதி | ரஜினிகாந்த்தை 'தலைவர்' எனக் குறிப்பிட்ட கமல்ஹாசன் | ஹரிஷ் கல்யாண் அடுத்து நடிக்கும் இரண்டு படங்கள் |

இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளான பாடகியும், இசையமைப்பாளருமான பவதாரிணி புற்றுநோய் பாதிப்பால் கடந்தாண்டு ஜன., 25ல் இலங்கையில் மறைந்தார். அவரது உடல் தேனியில் உள்ள இளையராஜாவிற்கு சொந்தமான பண்ணை நிலத்தில் அடக்கம் செய்யப்பட்டது. பவதாரிணி மறைந்து ஓராண்டு ஆன நிலையில் இளையராஜா உருக்கமான ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் பேசியிருப்பதாவது : ‛‛என் அருமை மகள் பவதா (பவதாரிணி) எங்களைவிட்டு பிரிந்த நாள். அன்பே உருவான மகள் பிரிந்த பின்பு தான் அந்தக் குழந்தை எவ்வளவு அன்பு மையமாக இருந்திருக்கிறாள் என்பது எனக்கு புரிந்தது. காரணம் என் கவனம் எல்லாம் இசையிலேயே இருந்ததால் என் குழந்தைகளை கவனிக்காமல் விட்டது இப்போது வேதனையை தருகிறது.
அந்த வேதனை தான் மக்களை ஆறுதல்படுத்தும் இசையாக எனக்கு கொஞ்சம் ஆறுதல் தருகிறது. பிப்., 12ல் பவதாவின் பிறந்தநாள். அன்றைய தினம் தான் அவருக்கு திதி வருவதால் அதை நினைவு நாள் நிகழ்ச்சியாக நடத்தலாம் என்று எண்ணி உள்ளேன். அதில் எல்லா இசைக்கலைஞர்களும் பங்கெடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். என் மகள் பவதா ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்'' என தெரிவித்துள்ளார்.