நிவேதா பெத்துராஜ் திருமணம் ரத்தா...? | மாப்பிள்ளை அவர்தான் ஆனால்.. என்கிற பாணியில் நடிகை வழக்கில் கருத்து தெரிவிக்கும் மலையாள நட்சத்திரங்கள் | பெப்காவில் திலீப்பை சேர்க்க முயற்சி ; ராஜினாமா செய்த பெண் டப்பிங் கலைஞர் | தக்க சமயத்தில் உதவி செய்வதில் சூர்யா எம்ஜிஆர் மாதிரி : விநியோகஸ்தர் சக்திவேலன் | அமெரிக்காவில் சிவகார்த்திகேயன், வெங்கட்பிரபு | பிக்பாஸ் ஜூலிக்கு டும் டும் : நிச்சயதார்த்தம் நடந்தது | பெங்களூருவிலும் மல்டிபிளக்ஸ் தியேட்டர் திறக்கும் மகேஷ் பாபு | படப்பிடிப்பு தொடங்கும் முன் ஓடிய ஹீரோயின் : டக்கென கமிட்டான மெகாலி | படையப்பா ரீ ரிலீஸ் : ரம்யா கிருஷ்ணன் மகிழ்ச்சி | உண்மை கதையில் விக்ரம் பிரபு |

சமீபகாலமாக இளையராஜா இசையில் உருவான பாடல்களை மற்ற இசையமைப்பாளர்கள் தாங்கள் இசையமைக்கும் படங்களில் பயன்படுத்துவது அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், அஜித் நடிப்பில் வெளியான குட் பேட் அக்லி படத்தில் இளமை இதோ இதோ, என் ஜோடி மஞ்ச குருவி, ஒத்த ரூபா தாரேன் போன்ற பாடல்கள் இடம் பெற்றன. தனது இசையில் உருவான பாடல்களை அனுமதியின்றி மற்றவர்கள் பயன்படுத்துவதை தடுக்க வேண்டும் என்று இளையராஜா சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டதை அடுத்து பாடலை பயன்படுத்த இடைக்கால தடை போட்டார்கள்.
இந்நிலையில், குட் பேட் அக்லி படத்தை தயாரித்த மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் சார்பில் இளையராஜாவின் பாடல்களை பயன்படுத்த விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என்றும் ஒரு மனு தாக்கல் செய்தார்கள். இந்நிலையில் இன்று அந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற தள்ளுபடி செய்துவிட்டது. அதோடு, தன்னுடைய பாடல்களை மற்றவர்கள் பயன்படுத்தினால் அதை தடுப்பதற்கும், பாடலை ரீமிக்ஸ் செய்வதை தடுக்கவும் இளையராஜாவுக்கு உரிமை உண்டு என்று தீர்ப்பளித்துள்ள நீதிபதி, இடைக்காலத்தடையை ரத்து செய்யக்கோரிய மனுவை தள்ளுபடி செய்து இந்த வழக்கின் விசாரணையை ஜனவரி 6-ம் தேதிக்கு ஒத்தி வைத்து இருக்கிறார்.
இதேபோல் இளையராஜா இசையில் உருவான கருத்த மச்சான் பாடல் டியூட் படத்தில் ரீமிக்ஸ் செய்து பயன்படுத்தப் பட்டதற்கும் சமீபத்தில் நீதிமன்றம் தடை போட்டது குறிப்பிடத்தக்கது.