கூலி: அமெரிக்காவில் 7 மில்லியன் வசூல் | ரஜினி, கமல் இணையும் படத்தில் சூர்யா நடிக்கிறாரா? | விபத்தில் சிக்கியதாக பரவிய வதந்தி: விளக்கமளித்து முற்றுப்புள்ளி வைத்த காஜல் அகர்வால் | அனுமதியின்றி தன் பெயர், படத்தை பயன்படுத்தக்கூடாது: ஐஸ்வர்யா ராய் வழக்கு | சிவகார்த்திகேயன் அடுத்து நடிக்க போகும் 3 படங்கள் விபரம் | பிரபாஸ் பிறந்தநாளில் ‛தி ராஜா சாப்' படத்தின் முதல் பாடல் | செப்., 13ல் இளையராஜாவிற்கு தமிழக அரசு சார்பில் பிரமாண்ட பாராட்டு விழா | அல்லு அர்ஜூனை பார்த்து வியந்த ‛டிராகன்' பட இயக்குனர் | தன் முதல் தமிழ் படக்குழுவினருடன் பிறந்தநாளை கொண்டாடிய அனஸ்வரா ராஜன் | கல்கி 2ம் பாகத்தில் எனக்கு வாய்ப்பு கிடைக்குமா ? கல்யாணி பிரியதர்ஷன் ஆர்வம் |
'ஆர்ஆர்ஆர்' படத்திற்குப் பிறகு ராஜமவுலி இயக்க உள்ள படத்தில் மகேஷ் பாபு கதாநாயகனாக நடிக்கப் போகிறார். இப்படத்திற்கான கதை விவாதம் மற்றும் முன் தயாரிப்புப் பணிகள் கடந்த இரண்டு வருடங்களாக நடந்து வருகிறது. இப்படத்தில் பாலிவுட் நடிகையான பிரியங்கா சோப்ரா கதாநாயகியாக நடிக்க உள்ளதாகவும் தகவல் வெளியானது. சில நாட்களுக்கு முன்பு ஐதராபாத் வந்திருந்தார் பிரியங்கா. படத்திற்கான பேச்சுவார்த்தை, ஒப்பந்த வேலைகளுக்காக வந்தார் என்று தகவல் வெளியானது. ஆனால், அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.
இதனிடையே, இயக்குனர் ராஜமவுலி நேற்று சிங்கத்தின் புகைப்படம் ஒன்றின் முன் கையில் பாஸ்போர்ட் உடன் நிற்கும் புகைப்படம் ஒன்றை இன்ஸ்டா தளத்தில் வெளியிட்டிருந்தார். அதற்கு மகேஷ்பாபு, பிரியங்கா சோப்ரா உள்ளிட்டோர் கமெண்ட் செய்திருந்தனர். இதன் மூலம் பிரியங்கா இப்படத்தில் நடிப்பது உறுதியாகி உள்ளது. இருவரது கமெண்ட்டுக்கும் ரசிகர்கள் லைக்குகளை அள்ளித் தெளித்து வருகின்றனர்.