எம்புரான் பட ரிலீசுக்கு முன்னதாக லூசிபர் முதல் பாகத்தை மீண்டும் ரிலீஸ் செய்ய திட்டம் | கேரள மாணவன் தற்கொலை : சமந்தாவின் இரங்கலும் கண்டனமும் | பறந்து போ : ரோட்டர் டேம் திரைப்பட விழாவிற்கு தேர்வு | இட்லி கடை : அருண் விஜய்யின் முதல் பார்வை வெளியானது | காதலியை மணந்தார் கிஷன் தாஸ் | மணிரத்னம், லோகேஷ் படத்தில் நடிக்க ஆசை : நாக சைதன்யா பேட்டி | பிளாஷ்பேக் : அன்றைக்கே 40 லட்சம் வசூலித்த 'மங்கம்மா சபதம்' | நடிகர் சங்க புதிய கட்டிடம் திறப்பது எப்போது? - நிர்வாகிகள் ஆலோசனை | புதிய பாடல்களை விமர்சிக்க வேண்டாம் : சித்ரா வேண்டுகோள் | பிளாஷ்பேக் : பராசக்தி உருவான கதை இதுதான் |
'ஆர்ஆர்ஆர்' படத்திற்குப் பிறகு ராஜமவுலி இயக்க உள்ள படத்தில் மகேஷ் பாபு கதாநாயகனாக நடிக்கப் போகிறார். இப்படத்திற்கான கதை விவாதம் மற்றும் முன் தயாரிப்புப் பணிகள் கடந்த இரண்டு வருடங்களாக நடந்து வருகிறது. இப்படத்தில் பாலிவுட் நடிகையான பிரியங்கா சோப்ரா கதாநாயகியாக நடிக்க உள்ளதாகவும் தகவல் வெளியானது. சில நாட்களுக்கு முன்பு ஐதராபாத் வந்திருந்தார் பிரியங்கா. படத்திற்கான பேச்சுவார்த்தை, ஒப்பந்த வேலைகளுக்காக வந்தார் என்று தகவல் வெளியானது. ஆனால், அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.
இதனிடையே, இயக்குனர் ராஜமவுலி நேற்று சிங்கத்தின் புகைப்படம் ஒன்றின் முன் கையில் பாஸ்போர்ட் உடன் நிற்கும் புகைப்படம் ஒன்றை இன்ஸ்டா தளத்தில் வெளியிட்டிருந்தார். அதற்கு மகேஷ்பாபு, பிரியங்கா சோப்ரா உள்ளிட்டோர் கமெண்ட் செய்திருந்தனர். இதன் மூலம் பிரியங்கா இப்படத்தில் நடிப்பது உறுதியாகி உள்ளது. இருவரது கமெண்ட்டுக்கும் ரசிகர்கள் லைக்குகளை அள்ளித் தெளித்து வருகின்றனர்.