எனக்கும் ஒரு எதிர்காலம் உள்ளது... வதந்தி பரப்பாதீங்க : பவித்ரா லட்சுமி | பிரியங்கா மோகனின் துருக்கி கனவு நனவானது | லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி - அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | கார் பந்தய பயிற்சியின்போது மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித் | ரீ-ரிலீஸில் சச்சின் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு | விவாகரத்து நெருங்கிவிட்டது என பதிவு போட்ட ரசிகருக்கு சோனாக்ஷி கொடுத்த பதிலடி | ரயில் ஜன்னல் கம்பி வழியாக மாளவிகா மோகனனிடம் முத்தம் கேட்ட மர்ம நபர் | ரெட்ரோ படத்தின் டிரைலரை உருவாக்கிய அல்போன்ஸ் புத்ரன் | கேரள அரசு விருதை கட்டி அணைத்தபடி தூங்கிய பிரேமலு நடிகர் : வைரலாகும் புகைப்படம் | போதை பொருள் வழக்கு : நடிகர் சைன் டாம் சாக்கோ கைது |
'ஆர்ஆர்ஆர்' படத்திற்குப் பிறகு ராஜமவுலி இயக்க உள்ள படத்தில் மகேஷ் பாபு கதாநாயகனாக நடிக்கப் போகிறார். இப்படத்திற்கான கதை விவாதம் மற்றும் முன் தயாரிப்புப் பணிகள் கடந்த இரண்டு வருடங்களாக நடந்து வருகிறது. இப்படத்தில் பாலிவுட் நடிகையான பிரியங்கா சோப்ரா கதாநாயகியாக நடிக்க உள்ளதாகவும் தகவல் வெளியானது. சில நாட்களுக்கு முன்பு ஐதராபாத் வந்திருந்தார் பிரியங்கா. படத்திற்கான பேச்சுவார்த்தை, ஒப்பந்த வேலைகளுக்காக வந்தார் என்று தகவல் வெளியானது. ஆனால், அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.
இதனிடையே, இயக்குனர் ராஜமவுலி நேற்று சிங்கத்தின் புகைப்படம் ஒன்றின் முன் கையில் பாஸ்போர்ட் உடன் நிற்கும் புகைப்படம் ஒன்றை இன்ஸ்டா தளத்தில் வெளியிட்டிருந்தார். அதற்கு மகேஷ்பாபு, பிரியங்கா சோப்ரா உள்ளிட்டோர் கமெண்ட் செய்திருந்தனர். இதன் மூலம் பிரியங்கா இப்படத்தில் நடிப்பது உறுதியாகி உள்ளது. இருவரது கமெண்ட்டுக்கும் ரசிகர்கள் லைக்குகளை அள்ளித் தெளித்து வருகின்றனர்.