ஆர்யாவின் ‛அனந்தன் காடு' | விஜய்யை தொடர்ந்து தனுஷை இயக்கும் வினோத் | ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சியை காண முடியாமல் போனவருக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவு | துருவ நட்சத்திரம் : சிம்ரன் அளித்த உறுதி | குபேரா படத்தின் ரன்னிங் டைம் எவ்வளவு | பிளாஷ்பேக்: விஜயகாந்த் நடிக்க மறுத்து, மம்மூட்டி நடித்து வெற்றி பெற்ற திரைப்படம் | தர்மேந்திரா உடன் மீண்டும் இணைந்து நடிக்கும் அர்பாஸ் கான் | வெற்றிக்காக ஏங்கும் நயன், விக்கி | 25வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அஜித்தின் 'சிட்டிசன்' | ரவி மோகன் படத்தலைப்பு ‛ப்ரோ கோட்' : நான்கு ஹீரோயின்கள் |
இயக்குனர் சுந்தர்.சி, வடிவேலு கூட்டணி இணைந்து பணியாற்றும் படங்கள் எப்போதும் ரசிகர்கள் மத்தியில் அதிகம் ரசிக்கபட்ட நகைச்சுவை காட்சிகளாக நிறைந்திருக்கும். வின்னர், தலைநகரம், நகரம், கிரி, லண்டன் ஆகிய படங்களில் சுந்தர்.சி, வடிவேலு கூட்டணியில் உருவான காமெடி காட்சிகள் பெரிதளவில் ஹிட் ஆனது.
இந்த நிலையில் மீண்டும் சுந்தர்.சி, வடிவேலு கூட்டணியில் புதிய படம் உருவாகுவதாக கூறப்படுகிறது. அதன்படி, சுந்தர்.சி இயக்கத்தில் வடிவேலு, சுந்தர். சி இருவரும் இணைந்து நடிக்க புதிய படம் ஒன்று உருவாகுவதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தற்போது மலையாள நடிகர் பஹத் பாசிலுடன் இணைந்து மாரீசன் படத்தில் நடித்து வரும் வடிவேலு அந்த படத்தை முடித்ததும் சுந்தர்.சியுடன் கை கோர்க்கிறார்.