மீண்டும் தனுஷூடன் இணையும் சாய் பல்லவி! | 'தி ராஜா சாப்' படத்தில் சிறப்பு தோற்றத்தில் கயல் ஆனந்தி! | புதிதாக மூன்று படங்களை ஒப்பந்தம் செய்த ரியோ ராஜ்! | தேசிய விருது கிடைத்தால் மகிழ்ச்சி: துல்கர் சல்மான் | முதல் முறையாக ரவி தேஜா உடன் இணையும் சமந்தா! | சிம்புவின் மீது இன்னும் வருத்தத்தில் சந்தியா! | 56வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் கவுரவிக்கப்படும் ரஜினிகாந்த்- பாலகிருஷ்ணா! | 25 கோடி பட்ஜெட்டில் உருவாகும் படத்தில் லோகேஷ் கனகராஜின் சம்பளம் 35 கோடியா? | அறக்கட்டளை மூலம் 75 பேரை படிக்க வைத்த பிளாக் பாண்டி! | ரஜினிக்கு நடிப்பு சொல்லிக் கொடுத்த வாத்தியாரின் மறைவு |

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி மற்றும் பலர் நடிக்கும் படம் 'அமரன்'. காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் போரிட்டு வீர மரணம் அடைந்த முகுந்த் வரதராஜன் பயோபிக் படமாக இப்படம் உருவாகி வருகிறது.
ஓராண்டாக நடந்து வந்த இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. “கடைசி பிரேம் மற்றும் துப்பாக்கி சல்யூட்டுக்கான நேரம்” என சிறு வீடியோவையும் வெளியிட்டுள்ளார்கள்.
கடந்த வருடம் மே மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் ஆரம்பமானது. அதிக நாட்கள் படப்பிடிப்பு அங்குதான் நடைபெற்றது. சுமார் 75 நாட்கள் வரை நடைபெற்றுள்ளது. சென்னை, புதுச்சேரி உள்ளிட்ட இடங்களிலும் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. இந்த வருடம் பிப்ரவரி மாதம் இப்படத்தின் தலைப்பை 'அமரன்' என அறிவித்தார்கள்.
படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டதால் விரைவில் படம் ரிலீஸ் அறிவிப்பு வெளியாகலாம்.